உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி

தென் ஆப்ரிக்க அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். டி காக் 5 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்தார். டு பிளெஸ்ஸி 23 ரன் (35 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 75 பந்தில் அரை சதம் அடித்த அம்லா, 55 ரன் எடுத்த நிலையில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த இன்னிங்சின்போது ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 8000 ரன் கடந்த வீரர் என்ற சாதனை அம்லா வசமானது. அவர் 179 போட்டியில் இந்த சாதனை மைல்கல்லை எட்டி, இந்தியாவின் கோஹ்லியை (183 போட்டி) முந்தினார்.

மார்க்ராம் 38 ரன் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். வாண்டெர் டுஸன் – டேவிட் மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 72 ரன் சேர்த்தது. வாண்டெர் அரை சதம் அடித்து அசத்தினார்.

மில்லர் 36 ரன், பெலுக்வாயோ (0) இருவரும் பெர்குசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. வாண்டெர் டுஸன் 67 ரன் (64 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மோரிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வென்றது. கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 138 பந்தில் 103 ரன் எடுத்தார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணி 6 லீக் ஆட்டத்தில் 4வது தோல்வியை சந்தித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories