நாராயணா! பார்வை சரியாக இருந்த வரையில் படிச்சுட்டேன்!

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? பார்வை சரியாக இருந்த வரையில் படிச்சுட்டேன் . இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து சென்ற வித்யார்த்தி “படி படி’ என்று எச்சரிக்கை விட்டுண்டே போனபோது-பெரியவா சொன்னது மேலே)

(பெரியவாளின் நகைச்சுவையும் அறிவுரையும்)
64482304 2316927818580050 1825771523579838464 n - 2026
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (179)

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஏழுமலையான் சந்நிதியை நோக்கி நடைப்பயணம் மலைப்பாதை வழியாக -பெரியவாள். கண்பார்வை மங்கியிருந்தது.

சமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப் போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால் ஆனது. தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர், மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச் செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்

.பெரியவாள் கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில் வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்று விட்டார்கள்.

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன். இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

வித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.

“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வதி ஸ்வரூபம்..” அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில் கெஞ்சினான் , வித்யார்த்தி.

“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே.. என்கிறாயா?”

வித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.

பெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.

“இனிமேல், படிவந்தால், “கோவிந்தா…கோவிந்தா..,ன்னு சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.

குன்றுகள் வித்யார்த்தியின் குரலை எதிரொலித்தன . காற்றின் ஒவ்வொரு வீச்சிலும் ‘கோவிந்தா’க்கள்.

பெரியவாள் ஓர் இளஞரைப் போல, வேகமாகப் படிகளில் ஏறினார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories