நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.70 லட்சம்) நிரந்தர வருமானம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஜூன் 5-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நடைபெற உள்ளது. உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 2,500 டாலர் ஊதியத்தை அரசே வழங்கும். குழந்தைக்கு 625 டாலர் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஆண்டிற்கு 200 பில்லியன் டாலர் சுவிஸ் அரசுக்கு செலவாகும்.
[wp_ad_camp_1]



