மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று(மே 27) சென்னை வருகிறார்.இரண்டாண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், மக்களின் நலனுக்காக, மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அதன் சாதனைகளையும், நாடு முழுவதும் எடுத்துரைக்க, கட்சித் தலைமை முடிவு எடுத்துள்ளது. மக்களுக்காக, பா.ஜ., அரசு ஆற்றியுள்ள பணிகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாடு முழுவதும், மத்திய அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, சென்னை, தி.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச, மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் இன்று தமிழகம் வருகிறார்.
[wp_ad_camp_1]



