நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 120வது மலர் கண்காட்சி இன்று(மே 27) துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. புதிய அரசின் முதல் விழாவாக நடத்தப்படும் கண்காட்சி, காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. மேரிகோல்டு, பிஞ்ச்மேரி கோல்டு, பால்சம், பெகோனியா, டேலியா, லில்லியம், சன்பிளவர் உட்பட பல வண்ண மலர்கள், தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 30 ஆயிரம், சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கார்னேஷன் மலர்களை கொண்டு, 68 அடி நீளம், 10 அடி அகலம், 30 அடி உயரத்தில், சென்னை மத்திய ரயில் நிலைய கட்டட வடிவமைப்பு மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. ‘ஆர்கிட்’ மலர்கள் உட்பட, பல வண்ண மலர்களில், ஐந்து அலங்கார வளைவுகள் காட்சி திடலில் வைக்கப்பட்டு உள்ளன; பார்வையாளர்களை கவரும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது
[wp_ad_camp_1]



