இன்று தொடங்குகிறது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி

bookfair - 2026

கோவை கொடிசியாவில் மாபெரும் புத்தகத்திருவிழா இன்று துவங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன், கொடிசியா இணைந்து நடத்தும் 5வது புத்தகத்திருவிழா இன்று முதல் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக கோவை புத்தக திருவிழா கொடிசியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழா தற்சமயம் ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றதில், 1.5 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையானது. இந்த வருடம் 2.5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.3 கோடி வரை புத்தக விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் 20ம் தேதி மாலை 3.30 மணி அளவில், கோயமுத்தூர் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்திய கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், படைப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

28 ஆம் தேதி காலை சொல்முகம் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 150 பதிப்பாளர்களின் 250 நூல் விற்பனை மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories