இன்று தொடங்குகிறது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி

bookfair - 2026

கோவை கொடிசியாவில் மாபெரும் புத்தகத்திருவிழா இன்று துவங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன், கொடிசியா இணைந்து நடத்தும் 5வது புத்தகத்திருவிழா இன்று முதல் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக கோவை புத்தக திருவிழா கொடிசியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழா தற்சமயம் ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றதில், 1.5 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையானது. இந்த வருடம் 2.5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.3 கோடி வரை புத்தக விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் 20ம் தேதி மாலை 3.30 மணி அளவில், கோயமுத்தூர் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்திய கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், படைப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

28 ஆம் தேதி காலை சொல்முகம் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 150 பதிப்பாளர்களின் 250 நூல் விற்பனை மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories