ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?

curd-rice

ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?
(ஒரு லிட்டர் பால் + ஒரு ஸ்பூன் தயிர்)
தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான கருத்தாகும். நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.
அரை லிட்டர் அரிசியை எடுத்து ஊறவைத்து களைந்து குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். சாதாரணமாக சாப்பாடு செய்யும் அளவிற்கு மேல் ஒரு அரை டம்ளர் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். சாதம் நன்றாகக் குழையவேண்டும். அதற்காக ஓரிரண்டு விசில் அதிகமாக விடவும். பிறகு குக்கரை இறக்கி ஆற விடவும்.
ஓரளவு ஆறினதும் குக்கர் வெய்ட்டை எடுத்து விட்டு மூடியைத் திறக்கவும்.
சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.
இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும். கொஞ்சம் வெண்ணையையும் போட்டுக்கொள்ளலாம். சாதம் எவ்வளவு குழைவாக ஆகிறதோ அந்த அளவிற்கு மசிக்கவும்.
கடைசியாக மசிக்கு முன் தேவையான பொடி உப்பைச் சேர்த்து மசிக்கவும். இப்போது சாதம் கை பொறுக்கும் அளவில் சூடாக இருக்கவேண்டும். இப்போது நன்கு காய்ச்சி ஓரளவிற்கு ஆறின ஒரு லிட்டர் பாலை இந்த மசித்த சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது சாதம் நன்கு இளகி இருக்கவேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றவும்.
ஆச்சா, இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும். அப்படியே ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.

ஒரு மூன்று மணி நேரம் கழித்து பாத்தாரத்தைத் திறந்து வைக்கவும். ஒரு சிறு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சூடவே இரண்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வதக்கவும். கூட சிறிது பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் சாதத்திற்குள் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், விதையில்லா திராக்ஷைப் பழம், மாதுளை முத்துகள் ஆகியவைகளையும் சாதத்தினுள் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் தயிர் சாதம் ரெடி. நல்ல ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories