“பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்”

12957391_1335113029837652_1819172567_n
“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”

(தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக
பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்)

சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(சற்று நீண்ட கட்டுரை ஆனால் ஒவ்வொரு
பாராவும் இன்பம்,பழசு சின்னது இது விரிவாக
சற்று சுருக்கப்பட்டது)

 
ஒருநாள் மகான் காஞ்சியில் முகாமிட்டு இருந்தபோது
அவரை தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள்.
பளிச்சென்று நெற்றியில் திருமண் வைணவர்களுக்கே
உரிய கரை போட்ட வேட்டி இடுப்பில்.துண்டு மார்பில்.

வந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாகக்
காணப்பட்டார்.மற்றவர்கள் யாவரும் ஸ்ரீபெரியவாளுக்கு
‘நமஸ்காரம்’செய்தபோது இந்த ஒருவர் மட்டும்
அசையாத சிலையாக, வெறித்த பார்வையுடன் அங்கே
நின்று கொண்டு இருந்தார்.முகத்தில் எந்த விதமான
உணர்ச்சியோ,சலனமோ இல்லை. அங்கே
வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

“இவர் என்னோட மாமா. இருந்தாற்போலிருந்து
இவருக்கு ஏதுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது.
இரவு,பகல் தெரியல்லே.எல்லா டாக்டர் கிட்டேயும்
காண்பிச்சாச்சு.அவளாலே ஏதும் கண்டுபிடிக்கமுடியல்லே
அவர்களே குழம்பிப்போய் தூக்க மாத்திரையை கொடுத்து
அனுப்பிட்டாங்க. பல திவ்ய தேசங்களுக்கும் அழைச்சுட்டு
போய் வந்துவிட்டோம். குணசீலம்.சோளிங்கர் ஒரு ஊரை

பாக்கி விடல்லே.ஆனால் பலன் ஏதும் இல்லை.அதனால்
பெரியவாகிட்டே வந்திருக்கோம் நீங்கதான் அருள்
புரியணும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இவர்கள் கவலையோடு சொன்னதை எல்லாம் மிகவும்
பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான்.
பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணக்கிரமத்தில்
சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச்
சொல்லி அவர்களிடம் கட்டளையிட்டார்கள்.

“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”

இதைத்தான் அவர்கள் 108 முறை ஜபித்து உச்சரிக்கச்
சொன்னார்கள்.அவர்கள் சொல்லி ஜபித்து முடித்ததும்

மனம் பேதலித்த அப்பெரியவருக்கு துளசி தீர்த்தம்
கொடுக்கச் சொன்னார்கள்.

அதற்கு அடுத்து ஸ்ரீபெரியவாளெனும் அந்த சாத்வீக
தெய்வத்தின் கட்டளைதான் அனைவரையும்
வியக்க வைத்தது. இதை அங்கிருந்தோர் யாரும்
எதிர்பார்க்கவில்லை.

ஸ்ரீமடத்திலிருந்து ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீபெரியவா
அங்கே அழைத்து வரச்சொன்னார்.அங்கே வந்த வஸ்தாத்
போன்ற மனிதரிடம்,கிழவர் தலையில் பலமாகக்
குட்டச் சொன்னார்.

அந்த மனிதரும் அப்படியே செய்தார். அடுத்த வினாடி
அங்கே ஒரு ஆச்சர்யம் எல்லோரும் வியக்கத்தக்க
வகையில் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ
தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.

 
“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம்?
இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? இது எந்த ஊரு?”

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

என்று சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
இதன் மூலம் அவர் பூர்ணமாக சுய நினைவுக்கு
வந்துவிட்டது தெரிந்தது. கூட இருந்தவர்கள்
நடந்தவற்றை மெதுவாக அதே சமயத்தில்
விளக்கமாகவும் சொன்னார்கள். இதை கேட்ட அவர்
பயபக்தியுடன் ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.
அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத
மகிழ்ச்சி. எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம்
சற்று நேரத்தில் மாயமாய் போனது போல் தீர்ந்து விட்டதே!
அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளோ?

கண் எதிரில் நடந்த உண்மைதானே அது?

“எல்லாம் பெரியவாளோட அனுக்கிரகம்”
என்னும் நன்றிப்பெருக்கோடு மருமான் சொல்லி
ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.

பெரியவா,- “எல்லாம் அந்த பெருமாள் அனுக்கிரகம்னு
சொல்லுங்கோ. அத்தனை திவ்யதேசம் போய் பெருமாளை
தரிசனம் செஞ்சதோட பலன்தான் இப்போ கிடைச்சிருக்கு…
நீங்க எல்லாமா சேர்ந்து அச்சுதன்,ஆனந்தன்,கோவிந்தனை

வேண்டி இங்கே ஜபம் செஞ்சதிலே கைமேல் பலன்
கிடைச்சிருக்கு” என்று அவர்களிடம் சர்வ சாதாரணமாகச்
சொன்ன மகான் தன் மேன்மையை துளியேனும்
வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற
ஒரு உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு
விட்டுவிடாமல்,அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ
சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக
மட்டும் அந்த அதிசயம் நடந்ததாக,தன்னை
முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்ததை
அனைவரும் புரிந்து கொண்டனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஸ்ரீ பெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும்
துளசியையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆனந்தக்
கண்ணீரோடு அகன்றனர். ஏதும் அறியாதது போல் இந்த
அத்வைத சந்யாசிரூப ஈஸ்வரர் அங்கே நின்று கொண்டு
இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories