December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

“நானே பத்ரி நாராயணன்”

p17new

நானே பத்ரி நாராயணன்”

(பெரியவாளின் விளையாட்டுப் புதிர்)


கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது 

பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார்.
ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம்
முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின்
கடைசியில் ஒரு மூதாட்டி…பழுத்த பழம் என்பார்களே
அந்த மாதிரி, மகானின் தரிசனத்துக்கு வந்து
கொண்டு இருந்தார்.

அருகில் வந்ததும் வணங்கி எழுந்தார்.

“உனக்கென்ன வேண்டும் கேள்?”
அந்த  மாது பரமபக்தை என்பதை மகான் அறிவார்…

“இனிமேல் எனக்கென்ன தேவை பிரபு?
சதா சர்வகாலமும் உங்களை ஆராதித்துக்
கொண்டு இருந்தாலே போதும்.

“அதுதான் இருக்கே…குறையில்லாம செய்றியே?
இப்போது உனக்கு ஏதாவது ஆசை இருக்கா….
இருந்தா சொல்….?”

பெரியவா இப்படிக் கேட்டதும் மூதாட்டி மௌனம்
சாதித்தார் சில வினாடிகள்.

“சொல்…பரவாயில்லை..என்னால் முடிந்த அளவுக்கு
உதவி பண்றேன்..”

மூதாட்டியின் மௌனம் கலைந்தது.

“எனக்கு ஒரு ஆசை…இந்த உயிர் போறதுக்குள்ளே
ஒரு தடவை பத்ரி நாராயணனைப் பார்க்கணும்”
என்றார் தயங்கித் தயங்கி, மெதுவான குரலில்…

பெரியவா பலமாக சிரித்தார்.

மூதாட்டிக்குப் புரியவில்லை.

“நீதான் எதிரிலேயே பார்த்துண்டு இருக்கிறாயே”

எதிரில் மகான் அல்லவா இருக்கிறார்!

“சந்தேகமா…மேலே பாரு” என்றார்.

பின்னால் இருக்கும் மரம் இலந்தை மரமாக இருந்தது.

“இலந்தை மரத்திற்கு “பத்ரி” மரம் என்று பெயர்…
அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?”

மூதாட்டிக்கு அது புரிய நெடு நேரமாயிற்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories