திருவள்ளூவர் சிலை உரிய மரியாதையுடன் மீண்டும் கங்கை கரையில் நிறுவப்படுவதை உறுதி செய்யும் வகையில், உத்தரகண்ட் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடஇந்தியாவின் யாத்ரிகர் தலத்தில், திருவள்ளூவர் சிலையை நிறுவவேண்டும் என்ற நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விடும் என்றும், இந்தப் பிரச்னைக்கு உரிய முன்னுரிமை அளித்து, உத்தரகண்ட் அரசுக்கு உரிய அறிவுரை வழங்கி, விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர், பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.



