“சட்டத்துக்கும் விலக்கு உண்டு.”

77134_693849987312454_1034041963_n

“சட்டத்துக்கும் விலக்கு உண்டு.”

(பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.

என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.)

சொன்னவர்-.ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஆறு கஜம் புடவை கட்டிக்கொண்டு ஓர் அம்மாள்
தரிசனத்துக்கு வந்தாள். மடத்துக்கு வருவது முதல்
தடவை போலும். ஒன்பது கஜம் புடைவை கட்டிக்

கொண்டு வருவதுதான் குடும்பப் பெண்டிரின்
சம்பிரதாயம் என்பதை அறியவில்லை.

ஸ்ரீமடத்தின் மகாபக்தை என்று தன்னைப்பற்றிப்
பெருமைப்பட்டுக் கொண்டிருந்த ஓர் அம்மையார்
இந்த ‘ஆறு கஜ’த்தைப் பார்த்துவிட்டார். வந்ததே
கோபம்! “மடிசார் கட்டிக்கொள்ளாமல் பெரியவாளை
தரிசிக்கக்கூடாது” என்று உரத்த குரலில் உத்தரவே
போட்டுவிட்டார்!.

அந்த சமயம் பார்த்து (அம்மையாரின் துரதிருஷ்ட

வசமாக) பெரியவா அந்த பக்கம் வந்தார்கள்.

“என்ன கூச்சல்? என்ன சண்டை?”

விவரம் பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நடுங்கிக் கொண்டிருந்த மடிசார் மாமியைக்
கூப்பிட்டார்கள் பெரியவா.

” அந்த அம்மாள் ரொம்ப ஏழை. அவளிடம் ஒன்பது
கஜம் புடவையே கிடையாது. வாங்க முடியல்லே!
நீ உடனே கடைக்குப் போய், ஒன்பது கஜம் புடவை
இரண்டும், ரவிக்கைத் துண்டும் வாங்கிக்கொண்டு
வந்து கொடு” என்று சற்றுக் கடுமையான குரலில்
கூறினார்கள்.

அந்தபடியே புடவைகள் வாங்கிக்கொண்டு வந்து,
ஏழை அம்மாளை மடிசார் கட்டிக்கச் சொல்லி
பெரியவாளிடம் அழைத்து வந்தார்.

“ரொம்ப சரி. ஆனாலும் நீ பண்ணினது தப்புதான்.
அந்த அம்மாகிட்டே மன்னிப்பு கேட்டுக்கோ…”

பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.
என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories