ஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு

Published:

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப் படுவதாக, நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது, அவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் இருவரும் இன்று பாளையங்கோட்டை சிறையில் காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் ஏப்.30 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நெல்லை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். முன்னதாக, பொறியாளர் செந்தில் குமாரின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதனைத்தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, தாமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாமா என்று நினைத்திருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன் முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img