December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டிய மத்திய அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு!

ramagopalan - 2025

காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாக இந்து முன்னணி நிறுவுனர் ராமகோபாலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…  காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து முன்னணி ஆரம்ப காலம் முதலே வலியுறுத்தி வரும் 12 அம்ச கோரிக்கைகளில், காஷ்மீர் தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது, ஆகவே இதனை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, பாரதம் வெட்டிப் பிளக்கப்பட்டு, ரத்த ஆறு பெருக்கெடுத்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தவன். காஷ்மீர் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட பாதிப்பை உணர்ந்தவன் என்பதால், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை நான் மனதார பாராட்டுகின்றேன், வரவேற்கிறேன்.

kashmir upa modi - 2025அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல், நாடு முழுவதும் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தார். காஷ்மீரை இணைப்பதில், பிரதமராக இருந்த நேரு கையாண்டு, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக்கொடி, தனி சட்டம், சலுகை என்பதையேல்லாம் அவர் ஒப்புக்கொண்டார்.

அங்கு செல்வதற்கு இந்தியர்கள் பர்மிட் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. காஷ்மீர் பெண்கள் இந்தியர்களை திருமணம் செய்துகொண்டால் சொத்தில் உரிமை கோர முடியாது, அதுவே, பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொண்டால் உரிமை உண்டு என்பதுபோன்ற பல குளறுபடிகள் இருந்தன. அதே சமயம், பாரதம், காஷ்மீர் வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதிகளை எல்லாம் காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்களும், பயங்கரவாத குழுக்களும் சுரண்டிக் கொழுத்தன.

இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவோ, புத்த மதத்தினர் அதிகம் வாழும் லடாக் பகுதியோ முன்னேறவேயில்லை. பயங்கரவாதத்தால் காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய தொழிலான சுற்றுலா ஒட்டுமொத்தமாக முடங்கிப்போனது.

kashmir amithsa - 2025காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து, இந்தியர்கள் அங்கு செல்வதற்குக்கூட பர்மிட் (அனுமதி) வாங்க வேண்டும் என்பதை எதிர்த்து, பாரதிய ஜனதாக கட்சியின்(அப்போது பாரதிய ஜனசங்கம் என்று பெயர்) நிறுவனத் தலைவர்  சியாம்பிரசாத் முகர்ஜி தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை சென்றார். சிறையில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். அவரது உயிர்தியாகத்திற்கு பலன் இப்போது தான் கிடைத்துள்ளது.

தனி நாடு போல காஷ்மீர் இருந்ததால், இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் கடந்த 72 ஆண்டுகளாக அங்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி வந்தன.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியிருக்கிறது மத்திய அரசு. மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசின் நேரடி ஆளுமையின் கீழ் வருவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் ஒப்புதல் தந்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆகியோருக்கு இந்து முன்னணி மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறது.

இந்த விஷயத்தில் திமுக மற்றும் வைகோ போன்றவர்கள் மக்களை திசைத்திருப்ப தேசவிரோதமாக பேசுவதைக் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதிலிருந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் செய்வது வெற்று அரசியல் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இனி காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவும், அது வளர்ச்சியை நோக்கி செல்லும் மாநிலமாக, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வரவேற்போம். நல்லதொரு துவக்கமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, இந்த நடவடிக்கை அமையட்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories