சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிய த்ரிஷா!

Published:

trisha - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் ‘ஆசாரியா’ திரைப்படத்திலிருந்து கதாநாயகி திரிஷா விலகிக்கொண்டார்.

கொரடால சிவா இயக்கத்தில் வரும் படம் இது. ‘கொணிதெல’ புரோடக்சன்ஸ் பெயரில் ராம்சரண் இதனை தயாரிக்கிறார்.

இந்த சினிமாவில் கதாநாயகியாக திரிஷாவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக திரிஷா வெள்ளிக்கிழமை மாலை தெளிவாக எடுத்துக் கூறினார்.

சில விஷயங்களில் முன்பு சொன்னபடியோ, பேசிக் கொண்டபடியோ இல்லாமல் வேறாக மாறியது. கிரியேட்டிவ் விஷயத்தில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்பட்டதால் சிரஞ்சீவி சார் சினிமாவில் இனி நடிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளேன். திரைப்படக் குழுவினருக்கு என் பாராட்டுக்கள். தெலுங்கு ஆடியன்ஸ் களே! மீண்டும் ஒரு நல்ல பிராஜக்டோடு உங்களை விரைவிலேயே சந்திக்க விரும்புகிறேன் என்று திரிஷா ட்வீட் செய்துள்ளார்.

trisha - 2026

சிரு, திரிஷா சேர்ந்து ‘ஸ்டாலின்’ சினிமாவில் நடித்தார்கள். 2006 ல் வந்த இந்த திரைப்படம் ஹிட்டானது. இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சிரு, த்ரிஷா காம்பினேஷனில் வரப்போகிற திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து ஆனந்தத்தோடு இருந்தார்கள். மீண்டும் ஒரு முறை இந்த ஜோடியை வெள்ளித்திரையில் பார்க்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

ஆனால் திரிஷா திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். திரிஷாவின் கையில் தற்போது பரமபதம் விளையாட்டு, ராங்கி, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகிய பிராஜெக்ட்கள் உள்ளன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img