December 6, 2025, 3:59 AM
24.9 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி -2; கொழுங்கொடி முல்லையின்… (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)

பொருள்

கொழுகொம்பின் மீது படர்ந்துள்ள முல்லை மலர்கள் இதழ் விரிந்து நிற்கின்றன. அவற்றைத் தழுவும் கீழ்திசைக் காற்று அவற்றின் நறுமணத்தை அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. தடாகத்தில் உள்ள தாமரை மலர்ப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அன்னங்கள் கண்விழித்தெழுந்தன. அவை சிறகடித்துப் பறக்க ஆரம்பிப்பதால், அவற்றின் இறக்கையில் ஒட்டியிருந்த பனித்துகள்கள் சிதறுகின்றன. முதலையின் கோரமான பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு வேதனையில் கதறிய கஜேந்திரனின் கொடுந்துயரைப் போக்கி அருளியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

கொழுகொடி – கொழுகொம்பைப் பற்றி நிற்கும் கொடி

கொழுமலர் – நன்கு வளர்ந்த மலர், நன்கு விரிந்த மலர்

கூர்தல் – பரவுதல்

மலர்அணை – மலர்ப் படுக்கை

பள்ளிகொள் அன்னம் – படுத்துறங்கும் அன்னம்

ஈன்பனி – பனிப்பொழிவு

இருஞ்சிறகு = இரு சிறகு – இரண்டு இறக்கைகள்

விழுங்கிய – கவ்விய

பிலம்புரை = பிலம் + புரை (பிலம் – வாயகன்ற, ஆழமான பள்ளம், பாதாளம்; புரை – போன்ற)

பேழ்வாய் – பெரிய வாய்

வெள் எயிறு – வெண்மையான கோரைப் பற்கள்

உற – அழுத்தியதால்

அனுங்கி – வாடிநின்று

அழுங்கிய – கதறிய

ஆனை – யானை (கஜேந்திரன்)

ஆன்மிகம், தத்துவம்

தடாகத்தில் ‘மலர்அணைப் பள்ளிகொள் அன்னம் சிறகுதறி’ உணவு தேடிக் கிளம்பும் காட்சியின் வழியாக, பாற்கடலில் பாம்பணைப் பள்ளிகொள் பெருமாள் கருட பட்சியின் மீது அமர்ந்து ஓடிவந்த காட்சி (கஜேந்திர மோட்சம்) நினைவூட்டப்படுகிறது. பறவைகள் தங்கள் அன்றாட அலுவலைத் தொடங்குவதுபோல, பகவான் தனது பக்தர்களைக் காக்கும் அலுவலைத் தொடர்கிறான்.

***

விளக்கம்; வேதா டி.ஸ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories