திருப்பள்ளி எழுச்சி -2; கொழுங்கொடி முல்லையின்… (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)

பொருள்

கொழுகொம்பின் மீது படர்ந்துள்ள முல்லை மலர்கள் இதழ் விரிந்து நிற்கின்றன. அவற்றைத் தழுவும் கீழ்திசைக் காற்று அவற்றின் நறுமணத்தை அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. தடாகத்தில் உள்ள தாமரை மலர்ப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அன்னங்கள் கண்விழித்தெழுந்தன. அவை சிறகடித்துப் பறக்க ஆரம்பிப்பதால், அவற்றின் இறக்கையில் ஒட்டியிருந்த பனித்துகள்கள் சிதறுகின்றன. முதலையின் கோரமான பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு வேதனையில் கதறிய கஜேந்திரனின் கொடுந்துயரைப் போக்கி அருளியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

கொழுகொடி – கொழுகொம்பைப் பற்றி நிற்கும் கொடி

கொழுமலர் – நன்கு வளர்ந்த மலர், நன்கு விரிந்த மலர்

கூர்தல் – பரவுதல்

மலர்அணை – மலர்ப் படுக்கை

பள்ளிகொள் அன்னம் – படுத்துறங்கும் அன்னம்

ஈன்பனி – பனிப்பொழிவு

இருஞ்சிறகு = இரு சிறகு – இரண்டு இறக்கைகள்

விழுங்கிய – கவ்விய

பிலம்புரை = பிலம் + புரை (பிலம் – வாயகன்ற, ஆழமான பள்ளம், பாதாளம்; புரை – போன்ற)

பேழ்வாய் – பெரிய வாய்

வெள் எயிறு – வெண்மையான கோரைப் பற்கள்

உற – அழுத்தியதால்

அனுங்கி – வாடிநின்று

அழுங்கிய – கதறிய

ஆனை – யானை (கஜேந்திரன்)

ஆன்மிகம், தத்துவம்

தடாகத்தில் ‘மலர்அணைப் பள்ளிகொள் அன்னம் சிறகுதறி’ உணவு தேடிக் கிளம்பும் காட்சியின் வழியாக, பாற்கடலில் பாம்பணைப் பள்ளிகொள் பெருமாள் கருட பட்சியின் மீது அமர்ந்து ஓடிவந்த காட்சி (கஜேந்திர மோட்சம்) நினைவூட்டப்படுகிறது. பறவைகள் தங்கள் அன்றாட அலுவலைத் தொடங்குவதுபோல, பகவான் தனது பக்தர்களைக் காக்கும் அலுவலைத் தொடர்கிறான்.

***

விளக்கம்; வேதா டி.ஸ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories