திருப்பள்ளி எழுச்சி -2; கொழுங்கொடி முல்லையின்… (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)

பொருள்

கொழுகொம்பின் மீது படர்ந்துள்ள முல்லை மலர்கள் இதழ் விரிந்து நிற்கின்றன. அவற்றைத் தழுவும் கீழ்திசைக் காற்று அவற்றின் நறுமணத்தை அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. தடாகத்தில் உள்ள தாமரை மலர்ப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அன்னங்கள் கண்விழித்தெழுந்தன. அவை சிறகடித்துப் பறக்க ஆரம்பிப்பதால், அவற்றின் இறக்கையில் ஒட்டியிருந்த பனித்துகள்கள் சிதறுகின்றன. முதலையின் கோரமான பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு வேதனையில் கதறிய கஜேந்திரனின் கொடுந்துயரைப் போக்கி அருளியவனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

கொழுகொடி – கொழுகொம்பைப் பற்றி நிற்கும் கொடி

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

கொழுமலர் – நன்கு வளர்ந்த மலர், நன்கு விரிந்த மலர்

கூர்தல் – பரவுதல்

மலர்அணை – மலர்ப் படுக்கை

பள்ளிகொள் அன்னம் – படுத்துறங்கும் அன்னம்

ஈன்பனி – பனிப்பொழிவு

இருஞ்சிறகு = இரு சிறகு – இரண்டு இறக்கைகள்

விழுங்கிய – கவ்விய

பிலம்புரை = பிலம் + புரை (பிலம் – வாயகன்ற, ஆழமான பள்ளம், பாதாளம்; புரை – போன்ற)

பேழ்வாய் – பெரிய வாய்

வெள் எயிறு – வெண்மையான கோரைப் பற்கள்

உற – அழுத்தியதால்

அனுங்கி – வாடிநின்று

அழுங்கிய – கதறிய

ஆனை – யானை (கஜேந்திரன்)

ஆன்மிகம், தத்துவம்

தடாகத்தில் ‘மலர்அணைப் பள்ளிகொள் அன்னம் சிறகுதறி’ உணவு தேடிக் கிளம்பும் காட்சியின் வழியாக, பாற்கடலில் பாம்பணைப் பள்ளிகொள் பெருமாள் கருட பட்சியின் மீது அமர்ந்து ஓடிவந்த காட்சி (கஜேந்திர மோட்சம்) நினைவூட்டப்படுகிறது. பறவைகள் தங்கள் அன்றாட அலுவலைத் தொடங்குவதுபோல, பகவான் தனது பக்தர்களைக் காக்கும் அலுவலைத் தொடர்கிறான்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

***

விளக்கம்; வேதா டி.ஸ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories