திருப்பாவை- 12; கனைத்திளங் கற்றெருமை (பாடலும் விளக்கமும்)

thirupavai pasuram 12 - 2026
andal-vaibhavam-1

ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 12 – கனைத்திளங் கற்றெருமை

விளக்கவுரை: வேதா. டி. ஸ்ரீதரன்

கனைத்(து) இளங் கற்றெருமை கன்றுக்(கு) இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்(து) இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்(கு) இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோ(ர்) எம்பாவாய். (12)

பொருள்

கன்றுகளின் பசியைப் பற்றிய கவலையினால் எருமை தனது மடியில் இருந்து பாலைச் சொரிந்தபடியே அங்குமிங்கும் செல்கிறது. அவ்வாறு இடைவிடாமல் சொரிந்த பாலினால் வீட்டு வாசல் ஈரமாகிறது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் சேறாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய எருமைகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் இடையனின் தங்கையே! மார்கழி மாதத்துப் பனி எங்கள் தலையில் கொட்டுகிறது. அதைப் பொருட்படுத்தாமல் உன் வீட்டு வாசலில் நாங்கள் நிற்கிறோம். பெரும் கோபத்தினால் ராவணனை அழித்தவன், நம் எல்லோர் மனத்துக்கும் இனியவன், அந்த நாராயணனின் பெருமைகளைப் பாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நீயோ வாயே திறக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே! எல்லோரும் உன்னை வேடிக்கை பார்க்கிறார்கள். சீக்கிரம் எழுந்திரு.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அருஞ்சொற்பொருள்

நினைத்து – (தன் அருகே இல்லாத கன்றைப் பரிவுடன்) நினைத்து

சோர – சொரிய

தங்காய் – தங்கையே

பனித்தலை வீழ – தலைமீது பனி கொட்டும் நிலையில்

வாசற்கடை பற்றி – வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு

கோமான் – அரசன்

செற்ற – வென்ற

இனித்தான் – இனியாவது

கனைத்து ….. பால் சோர – தனது கன்றின் பசியை நினைத்து வருந்திய எருமை கனைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியது; கன்றுக்காகக் காம்புகளின் வழியே பாலைச் சொரிந்தது.

மனத்துக்கு இனியான் –

ராம என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையாக ‘இனியன்’ என்ற தமிழ்ச் சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்க விஷயம்.

800563 andal - 2026
andal-srivilliputhur-2

மொழி அழகு

தரையில் பால் சொரிந்த வெள்ளம், தலையில் பனி வெள்ளம் இரண்டையும் வெளிப்படையாகச் சொல்லி, மனத்துக்கினியான் என்ற நாமாவின் மூலம் உள்ளத்தில் பெருகும் பக்தி வெள்ளத்தைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

ஆன்மிகம், தத்துவம்

கன்றுக்கு இரங்கும் எருமையைப் போன்றதுதான் பகவானின் கருணையும். ஜீவர்களுக்காக ஏங்கும் அவன் கருணையும் வற்றாது பொழிகிறது. அதன் பொழிவுக்குக் காரணம் ஏதுமில்லை. இதுவே அ-வ்யாஜ கருணா (காரணம் ஏதும் இல்லாத கருணை) எனப்படுகிறது.

***

பகவானை அக்காரக் கனி (சர்க்கரைக் கனி) என்பார்கள். அவன் அவ்வளவு இனிமையானவனாம். இனிப்புப் பண்டம் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடியாது, திகட்டி விடும். ஆனால், இந்த இனிப்போ சுவைக்கச் சுவைக்க மேன்மேலும் தித்திக்கும். எனவே, அவன் மனத்துக்கினியான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories