சுத்தானந்த பாரதி பெயரில்… இந்திய மொழிகள் ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு பல்கலை., அமைய வேண்டும்!

kaviyogi-sudhananda-bharathi
kaviyogi-sudhananda-bharathi

இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பும் பெரும் பங்காற்றிய கவியோகி சுத்தானந்த பாரதியின் பெயரில், அவரது இடமான சிவகங்கையில் இந்திய மொழிகள் ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டுள்ளன.

இது குறித்து சிவகங்கை மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுகலை & தமிழாய்வுத் துறை முன்னாள் தலைவருமான முனைவர் பெ. சுபாசு சந்திர போசு தெரிவித்ததாவது…

நான் ஜன.18 மதியம் 2 மணிக்கு மதுரையிலிருக்கும் பேராசிரியர் ம. பெ. சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தேன். அவர் எப்போதும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பவர். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

கவியோகி சுத்தானந்த பாரதியார் பற்றி சிவகங்கை, இராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மலருக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் நல்லாசிரியர் – மலரின் பொறுப்பாசிரியர் வேங்கடகிருஷ்ணன் (கவியோகியின் அண்ணன் மகன்) எழுதச் சொல்லியுள்ளார். இந்த நினைவுகளுடன், இன்று காலை நடைப்பயணத்தில் அலைமோதிய கவியோகியின் உரையாடல் குறித்து அவசியம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

kaviyogishudhanada bharati
kaviyogi shuddhananda bharati

“ஏழை படும் பாடு “என்னும் நாவல் குறித்த பேச்சு வந்தது. அது விக்டர் யூகோ என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் பிரெஞ்சில் “Les Miserable” என்னும் பெயரில் எழுதிய மகத்தான நாவல். இந்நாவலை கவியோகி பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாகத் தமிழில் “ஏழை படும்பாடு “என்று மொழிபெயர்த்துள்ளார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

கவியோகியின் தாய் மொழி தெலுங்கு. அத்துடன் தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ்சு, ரஷ்ய மொழிகள் பல கற்று 25 ஆண்டுகள் மெளன விரதமிருந்து 500க்கு அதிகமான தமிழ் நூல்களை எழுதிய மகத்தான முதுபெரும் அறிஞர் மட்டுமல்ல; ஞானியாகவும் அறியப்பட்டவர்.

தமிழில் கம்பனுக்குப் பிறகு “பாரத சக்தி மகா காவியம்“ படைத்தவர். இக்காவியம் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராசராசன் விருதைப் பெற்ற முதல் நூல்.

இன்று அவரின் குடும்பத்தார் சிவகங்கைக்கு அருகிலுள்ள சோழபுரத்தில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தேசீய மேனிலைப் பள்ளியைச் சிறப்பாக விவேகானந்தர் சொல்லிய மதிப்பு வாய்ந்த கல்வி முறையில் நடத்தி வருகின்றனர். இது அரசு உதவிபெறும் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க பள்ளி.

தமிழக அரசு கவியோகி சுத்தானந்த பாரதியாரின் அனைத்து நூல்களையும் உயர்தொகை கொடுத்து அரசுடமையாக்கி நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.

நான் புதுதில்லிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பணிக்காகச் சென்ற போது லால்பகதூர் சாஸ்திரி சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் இரண்டு முறை தங்கி உள்ளேன். அது இயற்கை எழிலும் அழகிய கட்டடங்களும் , குடியிருப்பும் இணைந்த காட்சி. இன்னும் மனதை விட்டு அகலாத இயற்கையின் இனிய கொடை.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அந்த வளாகத்தில் காலையில் தினம் தினம் நடந்தது; அந்த விருந்தினர் இல்லத்தின் உணவகத்தில் கரம்சிங் தயாரித்த சப்பாத்தியும், இட்லியும் அவர் அன்புடன் உணவு பரிமாறியதும் இன்னும் மறக்க முடியாத நல்ல நினைவுகளாக இருக்கின்றன.

subhash-chandra-bose
subhash-chandra-bose

அந்தப் பல்கலைக்கழகம் போல் மத்திய அரசு சிவகங்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பெயரில் இந்திய மொழிகளின் ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புப் பல்கலைக்கழகத்தை (Kaviyogi Suddhananda Bharathiyar Indiana Languages Research and Translation Central University) உருவாக்க வேண்டும்.

இது குறித்து யோசித்து, எதிர்வரும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நம் தமிழகத்தைச் சேர்ந்தவரும், தமிழின் சிறப்பையும் பிற மொழிகளின் மீதான தமிழின் ஆதிக்கத்தையும் நன்கு உணர்ந்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. இதற்காக, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அனத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த யோசனையை முன்மொழிய வேண்டும். இதனை மொழி ஆய்வாளர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

தமிழ் மூத்த மொழி, தனித்துவ மொழி என்று நாம் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரு மொழி ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புப் பல்கலைக் கழகத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் பெயரில் அமைத்தால், அது மொழி ஆய்வியல் மாணவர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாகவும் மொழிகளுக்கு இடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.

1 COMMENT

  1. மிக பெரிய மனிதர் எனது வழிகாட்டி
    வரகூர் கவி சுவாமிநாதன் முரளிதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories