
மாதுளை ஜூஸ் – 2 கப்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
ரசப்பொடி – 3 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவைக்கு.
தாளிக்க…
நெய், கடுகு, சீரகம், – தேவைக்கு
பழுத்த தக்காளி. – 2,
வெந்த துவரம் பருப்பு – 1/2 கப்.
செய்முறை:
புளியுடன் சேர்த்து தக்காளியையும் கசக்கி 3 கப் சாறு எடுக்கவும். புளி தண்ணீரை உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். ரசப்பொடி சேர்க்கவும்.
வெந்த துவரம் பருப்பை சிறிது நீரில் கரைத்து ரசத்துடன் சேர்த்து, நுரைத்து வரும் பொழுது மாதுளை ஜூஸ் சேர்த்து உடன் அடுப்பை அணைக்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கடைசியாக மல்லித் தழை சேர்க்கவும்.