December 8, 2025, 3:13 PM
28.2 C
Chennai

இந்தியரைப் பற்றி இழிசொல் உரைத்த ஹிட்லர்! வெகுண்டெழுந்த வீரத் தமிழன்!

shenbagaraman
shenbagaraman

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் நினைவு நாள் (மே 26)
– நெல்லை சு.முத்து –

மே 26 இன்று, ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் என்று அழைக்கப்படும் டாக்டர் செண்பகராமன் பிள்ளை 87ஆம் நினைவு நாள்.

ஹிட்லரையே நடுங்க வைத்த தமிழ்ப்போராளி செண்பகராமன், 130 ஆண்டுகளுக்கு முன், 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் முக்கியப் பகுதியான புத்தன் சந்தை என்ற இடத்தில் பிறந்தவர். பெற்றோர் சின்னசாமிப்பிள்ளை-நாகம்மாள். தந்தை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்தார். இளம் வயதிலேயே சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார் செண்பகராமன்.

இவர் திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960க்கு முந்தைய காலத்தின் பள்ளி இறுதி பதினோராம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத்தொடங்கிய காலகட்டம். அந்த வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் ” ஏற்படுத்தி ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர்.

மன்னர் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடங்கி, ஐரோப்பா, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற அயல்நாடுகளில் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1914 முதல் 1920 வரை ஜெர்மனியில் வாழ்ந்து, ஆங்கிலப் படையின் இந்திய வீரர்களிடம் சுதந்திர உணர்வைத் தூண்டியவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் நாசிக்கட்சி உருவாகி வளர்ந்தது.

ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் பிரிட்டீஷ்காரர்களுக்கு அடிமைகளாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே ” என்று இந்தியரைத் தாழ்த்திப் பேசினார் சர்வாதிகாரி ஹிட்லர்.

நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார். ஹிட்லருடன் முரண்பட்டதால், நாசிக் கட்சியினரின் கோபத்திற்கு ஆளான டாக்டர் செண்பகராமன், அவர்களால் உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டாராம்.

மே 26, 1934 அன்று 43ஆம் வயதில் இறப்பதற்கு முன், அவர் தெரிவித்திருந்த விருப்பப்படியே இந்தத் தியாகியின் சாம்பலில் ஒரு பகுதி, அவர் பிறந்த ஊரில், ‘திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்’ செயல்பட்டு வரும் கரமனை அருகே கிள்ளியாற்றிலும், இன்னொரு பகுதி அவரது பூர்வீகமான பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (இன்றைய கன்னியாகுமரி-நாகர்கோயில் பகுதி) நாஞ்சில் நாட்டு வயல்வெளிகளிலும் தூவப்பட்டது.

இன்றைக்கும் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அவர் பெயரில் ‘டாக்டர் செண்பகராமன் பிள்ளை நகர்’ (Dr.CRP Nagar) உள்ளது. அங்கு 54ஆம் எண்ணிட்ட சொந்த இல்லத்தில்தான் நான் வசித்து வருகிறேன் என்பது பெருமைக்குரிய ஒன்றுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories