December 5, 2025, 4:21 PM
27.9 C
Chennai

யூரோ 2020: காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் தொடக்கம்!

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் தொடக்கம்.
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

காலிறுதிக்கு முந்தைய போட்டிகள் யூரோ 2020 இல் நேற்று 26 ஜூன் முதல் தொடங்கின. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி 26 ஜூன் 2021 அன்று இந்டிய நேரப்படி 2130 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் டென்மார்க் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இரண்டாவது போட்டி இத்தாலி மற்றும் ஆஸ்திரியா அணிகளுக்கு இடையே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் 27 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடைபெற்றது.
இவை நாக்-அவுட் போட்டிகள். எனவே தோல்வியுற்ற அணி வெளியே செல்லும்; வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

டென்மார்க் Vs வேல்ஸ் (டென்மார்க் வெற்றி, 4-0)

முதல் போட்டியில் டென்மார்க் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. டென்மார்க்கின் காஸ்பர் டோல்பெர்க் இரண்டு முறை கோல் அடித்தார், அவரது அணி வீரர்களான ஜோகிம் மேஹ்லே மற்றும் மார்ட்டின் ப்ரைத்வைட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து முடிவை உறுதிப்படுத்தினர். இதனால் 2004க்குப் பிறகு போட்டியின் கடைசி எட்டுக்குள் முதன்முறையாக டென்மார்க் முன்னேறுகிறது.

இந்த போட்டியில் வேல்ஸ் அணி மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அவர்கள் காட்டிய செயல்திறனை அவர்களால் இன்று காட்ட முடியவில்லை. இல்லாவிடில் அவர்கள் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு எட்டியிருக்க்லாம்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு, வேல்ஸ் கேப்டன் கரேத் பேல் டென்மார்க் கேப்டன் சைமன் கஜேருக்கு கையெழுத்திட்ட வேல்ஸ் சட்டையைக் கொடுத்தார். அந்தச் சட்டையின் பின்புறம் கிறிஸ்டியன் எரிக்சன் படம் இடம்பெற்றிருந்தது.

டென்மார்க்கின் தொடக்க ஆட்ட்த்தில் எரிக்சன் மாரடைப்புக்கு ஆளானது நினைவிருக்கலாம். அரையிறுதியில் இடம் பெறுவதற்காக டென்மார்க் அடுத்த சனிக்கிழமையன்று பாகுவில் நெதர்லாந்து அல்லது செக் குடியரசை எதிர்கொள்ளும்.

euro 2021
euro 2021

இத்தாலி vs ஆஸ்திரியா (இத்தாலி வெற்றி 2-1)

சனிக்கிழமை இரவு ஞாயிறு அதிகாலை காலிறுதிக்கு முன்னேற லண்டனில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. இத்தாலியின் ஃபெடரிகோ சிசா கூடுதல் நேரத்தில் கோல் அடித்தார். இந்த ஆட்டம் 90 நிமிடம் வரை கோலில்லாமல் முடிந்தது. பின்னர் இரண்டு பதினைந்து நிமிடங்களாக 30 நிமிடத்திற்கு ஆட்டம் நீட்டிக்கப்பட்டது.

முதல் பாதியில் இத்தாலி சிறப்பாக விளையாடியது. ஆனாலும் அவர்களால் ஒரு கோலைக்கூட அடிக்க முடியவில்லை. அணிகள் இடைவேளையில் கோல் இல்லாத டிராவொடு தங்களது டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றன.

ஆஸ்திரியா கோலடிக்காமல் போட்டியை மேலதிக நேரத்திற்கு கொண்டு செல்ல இத்தாலி சமாளித்தது. மாற்று வீரர் சிசா முதல் 15 நிமிட கூடுதல் நேர காலத்தில் கோலடித்து இத்தாலியை அடுத்த சுற்றுக்கு முன்னேற வைத்தார். மேட்டியோ பெசினா பின்னர் இத்தாலியின் இரண்டாவது கோல் அடித்தார்.

ஆஸ்திரியாவின் சாசா கலாஜ்ட்ஜிக் ஒரு கார்னர் ஷாட்டை தலையால் அடித்து கோலாக்கினார். கலாஜ்ஜிக்கில் இருந்து வந்த கோல், இத்தாலியின் கடந்த 1,168 நிமிட நேரமாக கால்பந்து ஆட்டத்தில் எதிரணியை கோலடிக்காமல் தடுத்த சிறப்பு முடித்தது.

அடுத்த வெள்ளிக்கிழமை ம்யூனிச்சில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இத்தாலி இப்போது பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் இடையிலான ஞாயிற்றுக்கிழமை போட்டியின் வெற்றியாளரோடு விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories