யூரோ 2021: இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 – இறுதிப்போட்டி வெல்லப்போவது யார்?
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

யூரோ 2020 கால்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று, 11 ஜூலை 2021 இரவு/நாளை அதிகாலை இந்திய நேரப்படி 0030 மணிக்கு, லண்டன் விம்ப்ளே மைதானத்தில் தொடங்குகிறது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதுகின்றன. இத்தாலி அணி குரூப் A பிரிவில் இடம் பெற்றிருந்தது. குரூப் ஆட்டங்களில் துருக்கி அணியை 3-0 கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வேல்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகண்டு குரூப்பில் முதலிடத்தைப் பிடித்தது.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்றும், அரையிறுதியில் ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.

euro 2021
euro 2021

இதுவரை இந்த யூரோ போட்டியில் இத்தாலி அணி 15 கோல்கள் அடித்துள்ளது; அதற்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி குரூப் D பிரிவில் இடம் பெற்றது. குரூப் ஆட்டங்களில் க்ரோஷியா அணியை 1-0, செக் குடியரசு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஸ்காட்லாந்து அணியுடன் கோலடிக்காமல் ட்ரா செய்தது. காலைறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியை வெளியேற்றியது.

காலிறுதியில் உக்ரைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதியில் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து அணி இதுவரை 8 கோல்கள் போட்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 1 கோல் போடப்பட்டுள்ளது. இரு அணிகளும் மொத்தம் 27 முறை ஒருவரோடு ஒருவர் மோதியுள்ளன.

அவற்றில் 10 போட்டிகளில் இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, இங்கிலாந்து 8 வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும், இந்த நிகழ்தகவு இங்கிலாந்திற்கு மிக அதிகம். 1978இல் நடந்த உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் அஸ்ஸூரிக்கு எதிராக வென்றதில் இருந்து மூன்று சிங்கங்கள் அணியான இங்கிலாந்து இன்னமும் ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்து அரையிறுதியிலிருந்து முன்னேறியிருக்காது ஏனெனில் யூரோ 2020 அரையிறுதிக்கு முன்னதாக, இங்கிலாந்து 5இல் ஒரு அரையிறுதி வெற்றியை மட்டுமே வென்றிருக்கிறது. என்னுடைய கணிப்பின்படி இங்கிலாந்து இந்தக் கோப்பையை வெல்லும்.

அந்த அணியின் ரஹீம் ஸ்டெர்லிங், ஹாரி கேன், ல்யூக் ஷா, கைல் வாக்கர் ஆகியோர் இன்றைய போட்டியில் நல்ல முறையில் ஆடுவார்கள். 55 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை ஒரு முறைகூட யூரோ கோப்பையை வென்றதில்லை. புதிய வரலாறு படைக்கப்படுகிறதா எனப் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories