‘போளா’ நகரில் கௌரவிக்கப்பட்ட 250 விவசாயிகள்!

sindhi bhola
சிந்தி(ரயில்வே) போளா.

~ ஜெயஸ்ரீ எம். சாரி

மஹாராஷ்டிராவில் மராட்டி மாதமான சிராவண மாதத்தின் அமாவாசையன்று ‘போளா’ எனப்படும் காளை மாடுகளுக்கான பெரும் விழா நடைபெறும். இந்த ஆண்டும் கொரானாவினால் விதிக்கப்பட்டுள்ள தடையினால் காளை மாடுகளின் அணிவரிசை நடத்தப்படவில்லை. ஆனாலும், விதர்ப பகுதியின் வர்தா மாவட்டத்தில் பிரஸித்தி பெற்ற ‘போளா’ நகரம் என்று அழைக்கப்படும் சிந்தி ( ரெயில்வே) நகரில் விவசாயிகள் தங்கள் காளை மாடுகளை அலங்கரித்து, பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்.

விவசாயிகளும், குழந்தைகளும் தங்கள் காளை மாடுகளை அவ்வூரில் இருக்கும் ஹனுமான் மந்திரில் பூஜைக்காக அழைத்து வந்தனர். அவ்வாறு வந்த 250 விவசாயிகளை மந்திரின் டிரஸ்டிகளின் கையால் மாலை, தொப்பி, அங்கவஸ்திரம் மற்றும் ‘ ஸ்ரீஃபல்’ எனப்படும் பூஜைக்குரிய தேங்காய் கொடுத்து கௌரவித்தனர்.

உள்ளூரில் பிரசித்தமான சுதாகர் கவகவே, மனோஜ் பேட்கர், பாபா பூதே, விட்டல் இடன்கர், கங்காதர் கலோடே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

bhola function
‘தான்ஹா போளா’ கொண்டாடிய 90-வயது ஷங்கர்ராவ் வான்கர்.

அமாவாசைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விதர்ப பகுதிக்கே உரிய ‘தான்ஹா போளா’வும் அங்கு சிறுவர்கள் பங்கேற்புடன் அருமையாய் கொண்டாடப் பட்டது. சிறார்கள் தங்கள் மரத்திலான நந்திகளை (காளை மாடுகளை) அழகாய் அலங்கரித்து, பூஜை செய்து மகிழ்ந்தனர்.

ஷங்கர்ராவ் வான்கர் என்னும் 90- வயது முதியவரும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்தவுடன் தானும் தன் மரத்திலான நந்தி பொம்மையை அலங்கரித்து மக்களுக்கு தர்ஷணத்திற்காக கொண்டு வந்தார்.

இதனைக் கண்ட இளைஞர்கள், ‘தான்ஹா போளா’ சிந்தி (ரெயில்வே) மக்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது,’ என்றனர்.

“‘தான்ஹா போளா’ அன்று சிந்தி ( ரெயில்வேயில்) ஆயிரக் கணக்கான நந்தி பொம்மைகள் பார்வைக்காக பல்வேறு இடங்களில் இருந்தும் கொண்டு வரப்படும்.வர்தா மாநிலத்தில் இருந்தும், அண்டை மாநிலங்களான நாக்பூர், யவத்மாலிலிருந்தும் மக்கள் சிந்தி( ரெயில்வே) நகரத்தில் கூடுவர். இதனால் பல உள்ளூர் கலைஞர்கள், வியாபாரிகளும் பலனடைவர்.

இந்த கொரோனா காலத்தில் அவர்களின் வாழ்வாதரம் என்பது முடங்கித் தான் போய் உள்ளது. வரும் வருடமாவது நல்லதாக அமைய வேண்டும்,” என்கிறார் மூத்தப் பத்திரிகையாளர் நரேந்திர சுர்கார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories