ஐபிஎல்: 4ம் இடம் யாருக்கு..?!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 03.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஆட்டம் – பெங்களூர் vs பஞ்சாப்

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கோலி, தேவதத் படிக்கல் இருவரும் நன்றாக விளையாடினார்கள். க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி நாலு சிகஸ், மூன்று ஃபோர்களுடன் 33 பந்தில் 57 ரன் எடுத்தார்.

டிவில்லியர்ஸும் 18 பந்தில் 23 ரன் எடுத்தார். இருந்தாலும் பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தார்கள். கடைசி ஓவரில் ஷமி மூன்று விக்கட்டுகளை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் (57), கே.எல். ராகுல் (39), நன்றாக ஆடினார்கள். ஆனால் மேட்சை சரியாக முடிக்கத் தெரியாத பிற வீரர்களால் பஞ்சாப் அணி இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து தோல்வியடைய வேண்டியதாயிற்று.

இரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்

பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. போன ஆட்டம் வரை அதிரடியாக ஆடிய விருத்திமான் சாஹா இன்று ரன் எடுக்காமல் இரண்டாவது பந்தில் அவுட்டானார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

கேன் வில்லியம்ஸ் (26), பிரியம் கர்க் (21), அப்டுல் சமது (25) ஆகிய வீரர்களைத் தவிர பிற வீரர்கள் கொல்கொத்தா பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர். எனவே அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 115 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணி தடுமாற்றத்தொடு விளையாடியது. ஷுப்மன் கில் (57), நிதிஷ் ராணா (25), தினேஷ் கார்த்திக் (18) எடுத்தனர். குறைவான் இலக்கை இறுதியில் 19.4 ஓவரில் 119 ரன் எடுத்ததன் மூலம் கொல்கொத்தா வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன். ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஏறத்தாழ தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நான்காம் இடம் யாருக்கு என்பதை இனி வரும் ஆட்டங்கள் முடிவு செய்யும்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இன்னமும் ஒரு மேட்சில் ஜெயித்தால் அரையிறுதிக்குச் செல்லலாம். பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த இரண்டு பொட்டிகளையும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
ipl table
ipl table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories