ஐபிஎல்: 4ம் இடம் யாருக்கு..?!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 03.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஆட்டம் – பெங்களூர் vs பஞ்சாப்

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கோலி, தேவதத் படிக்கல் இருவரும் நன்றாக விளையாடினார்கள். க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி நாலு சிகஸ், மூன்று ஃபோர்களுடன் 33 பந்தில் 57 ரன் எடுத்தார்.

டிவில்லியர்ஸும் 18 பந்தில் 23 ரன் எடுத்தார். இருந்தாலும் பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தார்கள். கடைசி ஓவரில் ஷமி மூன்று விக்கட்டுகளை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் (57), கே.எல். ராகுல் (39), நன்றாக ஆடினார்கள். ஆனால் மேட்சை சரியாக முடிக்கத் தெரியாத பிற வீரர்களால் பஞ்சாப் அணி இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து தோல்வியடைய வேண்டியதாயிற்று.

இரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்

பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. போன ஆட்டம் வரை அதிரடியாக ஆடிய விருத்திமான் சாஹா இன்று ரன் எடுக்காமல் இரண்டாவது பந்தில் அவுட்டானார்.

கேன் வில்லியம்ஸ் (26), பிரியம் கர்க் (21), அப்டுல் சமது (25) ஆகிய வீரர்களைத் தவிர பிற வீரர்கள் கொல்கொத்தா பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர். எனவே அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 115 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணி தடுமாற்றத்தொடு விளையாடியது. ஷுப்மன் கில் (57), நிதிஷ் ராணா (25), தினேஷ் கார்த்திக் (18) எடுத்தனர். குறைவான் இலக்கை இறுதியில் 19.4 ஓவரில் 119 ரன் எடுத்ததன் மூலம் கொல்கொத்தா வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன். ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஏறத்தாழ தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நான்காம் இடம் யாருக்கு என்பதை இனி வரும் ஆட்டங்கள் முடிவு செய்யும்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இன்னமும் ஒரு மேட்சில் ஜெயித்தால் அரையிறுதிக்குச் செல்லலாம். பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த இரண்டு பொட்டிகளையும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம்.

ipl table
ipl table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories