டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நைஜீரியா மற்றும் தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் கிரே, ஐரிஸ் பர்பில், மேக்னட் பிளாக் மற்றும் டர்கோயிஸ் சியான் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,612 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc T606 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
புதிய டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
உள்ளன.
மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 5000
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
மேலும் 4ஜி எலடிஇ, வைஃபை, புளூடூத், எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்.
டெக்னோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் விரைவில்
இந்நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது