சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்
தேவையானவை:
அரிசி – 2 கப்,
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை – சிறிது,
குடமிளகாய் – 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்),
வெங்காயம் – 1,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – இரண்டரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். தனியா, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, வேக வைத்துள்ள சக்கரைவள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். வறுத்து அரைத்த மசாலாவைத் தூவவும். சாதம், உப்பு, சர்க்கரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.