துகடோஜி மஹாராஜின் கர்மபூமியில் மௌன அஞ்சலி!

IMG 20221014 WA0024 - 2026

துகடோஜி மஹாராஜின் கர்மபூமியில் மௌன அஞ்சலி இன்று

  • ஜெயஸ்ரீ எம். சாரி

மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற துறவியான ராஷ்டிரசந்த் என அழைக்கப்படும் துகடோஜி மஹாராஜாவின் 54-வது நினைவு தினம் ( திதியின் அடிப்படையில்) இன்று அனுசரிக்கப்படுகிறது.

துகடோஜி மஹாராஜின் கர்மபூமியாக கருதப்படும் மஹாராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ள குருகுஞ்ச் மோஜ்ரி ( Gurukunj Mozri) என்னும் இடத்தில் அக்டோபர் 8-ஆம் தேதியில் இருந்து ஒரு வார த்திற்கு பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. குருசேவா மண்டல் மற்றும் பல அமைப்புகள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாநில அளவில் நடத்திக் கொண்டிருக்கின்றன.

IMG 20221014 WA0021 - 2026

துகடோஜி மஹாராஜ் தன் பஜனை பாடல்களின் மூலம் தேசபக்தி, சமுதாய மேம்பாட்டிற்கான வழிகள், உடல் ஆரோக்கியம், குடும்ப நலம், பெண்கள் மேம்பாடு என பல விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மஹாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய வினோபா பாவே போன்ற தலைவர்களுடன் பணியாற்றியும் உள்ளார். துகடோஜி மஹாராஜ் எழுதிய மராட்டி நூலான ‘கிராம் கீதா’ இன்றும் சமுதாயத்திற்கு வழிகாட்டும் அற்புத நூலாக கருதப்படுகிறது.

ஆங்கில நாட்காட்டியின் படி துகடோஜி மஹாராஜின் நினைவு தினம் அக்டோபர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்து. நாட்காட்டியின் படி அஷ்வின மாத கிருஷ்ண பக்‌ஷ பஞ்சமி திதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் இன்று அவருடைய திதி நாள் அனுசரிக்கப்படுகிறது.

IMG 20221014 WA0022 - 2026

” சப்கேலியே குலா ஹை, மந்திர் யஹ் ஹமாரா” (அனைவருக்குமாக திறந்து உள்ளது, இது எங்கள் கோயில், வித்தியாசங்களை மறந்தது, இது எங்கள் கோயில்) – என்று பாடிய துகடோஜி மஹாராஜ் அவர்களுக்கு இன்று குருகுஞ்ச் மோஜ்ரியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். பல வெளிநாட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றனர். இன்று மாலை சரியாக 4.58 மணிக்கு ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் அவர்களுக்கு 2-நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார்கள். அந்த சமயத்தில் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

துகடோஜி மஹாராஜ் கூறியுள்ள அற்புதமான விஷயங்களை அனைவரும் பின்பற்றி சமுதாய மேம்பாடிற்காக நம்மால் முடிந்த காரியங்களை செய்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.

வாழ்க துகடோஜி மஹாராஜ்!! வளர்க அவர் புகழ்!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories