விவசாயிகளை பாதுகாக்க 3600 கி.மீ தூரம் மாட்டு வண்டி பயணம்..

IMG 20230128 WA0193 - 2026


விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இளைஞர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திர சூரியன்(35). பட்டதாரி இளைஞரான இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார்.படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும் வேலைக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜன.,1இல் கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.
சனிக்கிழமை விருதுநகருக்கு வருகை தந்த சந்திரசூரியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : இன்றைய தலைமுறையினர் விவசாயத்தை மறந்து தனது படிப்பிற்கு தகுந்த வேலையைத் தேடி அண்டை மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் சென்று அங்கு அடிமையாக வேலை செய்கின்றனர்.
ஆகையால் இன்றைய தலைமுறையினர் எவ்வளவு சம்பாதித்தாலும் உண்பதற்கு உணவில்லை எனில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே இன்றைய தலைமுறையினர், விவசாயம் செய்வதைக் கற்று கொண்டு விவசாயம் செய்தால் தான் நம் நாடும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்.விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருள்களுக்கு சரியான விலையை ஒன்றிய அரசும், மாநில அரசும் நிர்ணயம் செய்திடவேண்டும்.

நாட்டு இனமாடுகளின் அழிவால் தான், இயற்கை உரங்கள் அடியோடு அழிந்து விட்டன. இதன் காரணமாகவே, ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் வந்து நம் மண்ணையும், மண்ணில் வாழ்ந்த நுண்ணுயிரிகளையும் அழித்து பாழாக்கிவிட்டன.

எனவே, அழிந்துவரும் நாட்டு இனமாடுகளை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3600 கி.மீ பயணம் மேற்கொண்டு அங்கு நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories