உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்(3): மறக்க இயலா 1983

world cup cricket 1983 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்
பகுதி 3 – 1983 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளும் இங்கிலாந்தில்தான் நடந்தன. இதன் பெயரும் “ப்ருடென்ஷியல் கோப்பை 83” என்பதாகும்.

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடந்தன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளும் இந்தப் போட்டியை இணைந்து நடத்தின.

எட்டு அணிகள் போட்டியில் கலந்துகொண்டன. ஏழு அங்கீகாரம் பெற்ற டெஸ்ட் அணிகள் – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் – ஆகிய அணிகளோடு அச்சமயத்தில் புதிதாக டெஸ்ட் அணியாகச் சேர்ந்த இலங்கை அணி, இவற்றோடு ஜிம்பாபே அணியோடு எட்டு அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.

எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. குரூப் A பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடின. குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, ஜிம்பாபே அணிகள் விளையாடின. இந்த ஆண்டு ஒரு புதிய மாற்றமாக ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளோடு இரு முறை விளையாடின.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

குரூப் A பிரிவில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் முதல் இரு இடங்களைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை வென்றது.

இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் பூவாதலையா வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (57 பந்துகளில் 38) மற்றும் மொஹிந்தர் அமர்நாத் (80 பந்துகளில் 26) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் விளையாடினர். ஏனெனில் ராபர்ட்ஸ், மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது பந்து வீச்சால் திணறடித்தனர்.

இந்திய அணியின் இறுதி ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடியதால் இந்தியா 183 ரன் (ஆல் அவுட், 54.4 ஓவர்கள்) எடுத்தது. இந்திய பந்துவீச்சு வானிலை மற்றும் பிட்ச் சூழலை சரியாக பயன்படுத்தி, மேற்கிந்திய தீவுகளை 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முடிவாகும். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற மிகக் குறைந்த ஸ்கோராக இது உள்ளது.

அமர்நாத், மதன் லால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக விவ் ரிச்சர்ட்ஸ் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அமர்நாத் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தார், தனது ஏழு ஓவர்களில் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் அவரது ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக மீண்டும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்தின் டேவிட் கோவர் 384 ரன் கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரரானார். இந்திய அணியின் கபில்தேவ் 303 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தார். இந்தியாவின் ரோஜர் பின்னி 18 விக்கட்டுகள் எடுத்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். மதன்லால் 17 விக்கட்டுகள் எடுத்தார்.

குரூப் ஆட்டங்களில் இந்திய அணியின் திறமை வெளிப்பட்டது. முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அதே அணியை இரண்டாவது முறை சந்தித்தபோது 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

ஆஸ்திரேலிய அணியிடமும் ஒரு ஆட்டத்தில் தோற்று, ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஜிம்பாபே அணியோடு விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றது. அதில் ஒரு ஆட்டம் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது.

என்ன அது? நாளை பார்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories