இன்று அரச மரத்தை வலம் வந்தால்… எவ்ளோ பலன் தெரியுமா?!

Published:

arasa mara vazhipdu - 2026

அரச மர (அஸ்வத்த) ப்ரதக்ஷிணம்: வம்ச விருத்தி, நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை, மனநிம்மதி நிச்சயம் கிடைக்கும்.

அதுவும் அமாவாஸ்யையும் திங்கட்கிழமையும் சேர்ந்த நாள் அன்று (அமாசோம அஸ்வத்த ப்ரதக்ஷிணம்) மிக உசத்தியாக சொல்லியுள்ளது. இந்த சுப நாளன்று 108 பிரதக்ஷிணம் செய்வார்கள்.

காலங்காலமாக ஸ்த்ரீகள் அரச மர பிரக்ஷிணம் செய்வது என்பது நமது சம்ப்ராதாயத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு மகத்தான அனுஷ்டானம் ஆகும். காலை வேளையில் தான் பிரதக்ஷிணம்.

ஒவ்வொரு பிரதக்ஷிண முடிவில் ஒரு பழம் அல்லது பக்ஷணம் அல்லது வெறு ஏதாவது ஒரு விசேஷமான பொருளை சமர்ப்பிப்பதும் வழக்கத்தில் உள்ளது.

பிரதக்ஷிணம் செய்யும் போது மனதில் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதும் சம்ப்ரதாயம்:

மூலதோ பிரம்ஹ ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம:

மும்மூர்த்திகள் ஸ்வரூபம் அரச மரம். பிரஹ்மா விஷ்ணு சிவன் அரச மரத்தில் சாந்நித்யம் கொண்டுள்ளார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

விசேஷமாக ஸ்த்ரீகளுக்கு எடுத்துள்ள அனுஷ்டானமாக இருந்தாலும் ஆண்களும் குழந்தைகளும் கூட பிரதக்ஷிணம் செய்யலாம். மடி அவசியம்.

குறிப்பாக ஆரோக்யகரத்தை தரும் இந்த அனுஷ்டானம் நமது முன்னோர்களால் மிக ச்ரத்தையாக யதாவிதியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

  • சர்மா சாஸ்திரிகள்

Related articles

Recent articles

spot_img