December 5, 2025, 7:00 PM
26.7 C
Chennai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகள் துவங்கியது ..

IMG 20230717 092640 - 2025

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு இன்று முதல் ஐயப்பனுக்கு ஆடி மாத நெய் அபிஷேகம் பூஜை வழிபாடு துவங்கியது.இன்று முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

IMG 20230717 092705 - 2025

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆண்டுதோறும் மாதப்பிறப்பன்று 5 நாட்கள் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனி மாத பூஜைக்காக கடந்த ஜூன் 15ஆம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20ஆம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை திருநடை இன்று அதிகாலை 5 மணிக்கு கர்க்கிடக மாச பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமை வகித்தார்.கோயில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி தலைமை வகித்து கோவில் கருவறை திறந்து தீபம் ஏற்றினார். ராஜீவரரின் மகன் கந்தர் பிரம்மதத்தனும் தந்தையுடன் இருந்தார். தொடர்ந்து மேல்சாந்தி, கணபதி, நாகர் கோவிலை திறந்து, தீபம் ஏற்றிய பின், 18ம் படி முன் உள்ள தீக்குண்டத்தில் தீ மூட்டி, ஐயப்ப பக்தர்களுக்கு, தந்திரி கண்டரர் ராஜீவர், கண்டரர் பிரம்மதத்தர், மேல்சாந்தி ஆகியோர் விபூதி பிரசாதம் வழங்கினர்.

வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். வரும் ஆக 10இல் இந்த வழிபாடு நடைபெறுகிறது.

இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருந்திருக்கும். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20230717 092623 - 2025

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். அதன் பின்னர் அடைக்கப்படும் நடை டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் இதற்காக திட்டமிட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா வனத்தில் பெய்த மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருகிறது.ஐயனை தரிசிக்க பாஜக வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று சபரிமலை வந்து இன்று ஐயப்பனுகு நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories