December 5, 2025, 6:03 PM
26.7 C
Chennai

பாஜக., தொண்டரின் குழந்தைக்கு, நீண்ட தேடலுக்குப் பின் அண்ணாமலை சூட்டிய பெயர்..!

annamalai namakkal1 - 2025

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பாஜக தலைவர் அண்ணாமலையை மிஞ்ச ஆளே இல்லை.

பொதுவாக தொண்டர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி தலைவரிடம் வேண்டினால் ஜெயகடா பிள்ளை எருமைகடா என்று சிம்பிளாக முடித்து கொண்டு போயிட்டே இருப்பாங்க.

ஆனால் பாஜக தொண்டர் ஒருவருக்கு தன் குழந்தைக்கு தலைவர் அண்ணாமலை பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசை.

கட்சி பிரமுகர் ஒருவர் மூலம் கஷ்டபட்டு கோரிக்கையை அவரிடம் சேர்த்து விட அவருக்கு கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் வழங்கப்படுகிறது. அவரும் போன பத்து நிமிடத்தில் திரும்பி விட போகிறோம் என்ற எண்ணத்தில் அவர் தன் மனைவி குழந்தையுடன் அண்ணாமலை அவர்கள் வீட்டிற்கு செல்கிறார்.

இன்ப அதிர்ச்சியாக அவரே வாசலில் நின்று வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்று அமர வைக்கிறார். குழந்தையின் பெயர் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கவனமாக கேட்டு அதற்கேற்றவாறு “வே ” என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் சூட்ட, அந்த எழுத்தில் தொடங்கும் பல பெயர்களை குழந்தையின் பெற்றோருடன் பரிசீலனை செய்து, அவர்கள் சம்மதத்துடன் வேதாந்த் என்ற பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்படுகிறது.

நல்ல நேரம் தொடங்க ஒரு மணி நேரம் இருக்க அது வரை வீட்டில் அவர்களை அமர வைத்து உபசரித்து நல்ல நேரம் தொடங்கியதும் இந்து முறைப்படி காதில் மூன்று முறை கூறி பெயரிட்டு, பிரார்த்தனை செய்து,ஆசிகள் வழங்கி பரிசு பொருட்களுடன் வழியனுப்பி வைக்கிறார்.

பல நாள் கனவோடு பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த ஒரு குழந்தை பெயர் சூட்டுவதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிறையவே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி தான் விரும்பும் தலைவர் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று ஆசைப்படுவாயாயின் அவர் மீது எவ்வளவு பற்றும் நம்பிக்கையும் கொண்டிப்பார்கள் அந்த பெற்றோர்.

அந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பு மற்றும் ஆசையை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுதானே நல்ல தலைவருக்கு அழகு

தன் பொறுப்பை உணர்ந்து அன்பும் அக்கறையுமாக பெற்றவர்கள் சம்மதத்துடன் பெயர் தேர்வு செய்து, சரியான நேரத்தில் பெயர் சூட்டி, ஏறதாள ஒரு வைபவமாகவே நடத்தி விட்ட அண்ணாமலை நிஜமாகவே பாராட்டிற்கு உரியவர்.

இரண்டு நிமிடத்தில் ஆட்டு கடா மாட்டுகடான்னு, ஏதோ வாயில் வந்ததை சூட்டி பெற்றவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் தலைவர்கள் மத்தியில், ஒரு சாதாரண பெயரிடும் விஷயத்தை கூட நிதானமும் அக்கறையுமாக பக்குவமாக செய்கிறார் என்றால் , அவரை ஆட்சியில் அமர வைத்தால் நிச்சயம் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துதான் செய்வார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரின் சரியான அணுகுமுறைக்கு இந்த நிகழ்வு ஒன்றே போதுமானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories