மஹாராஷ்டிராவில் திருவள்ளுவருக்கு சிலை

thiruvalluar in maharashtra - 2026
ஷேகாவில் உள்ள தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை 

– ஜெயஸ்ரீ எம். சாரி 

மஹாராஷ்டிர மாநிலத்தில் புல்டானா மாவட்டத்தில் ஷேகாவ் என்னும் இடத்தில் நம் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில்  துறவிகளுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவ்வாறான துறவிகளில் ஒருவர் தான் ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ். அவருடைய கோயிலானது ஷேகாவ் என்னும் புனித நகரில் உள்ளது.

ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் தரிசிக்கும் இடமாக இக்கோயில் இருப்பினும் சுத்தத்திற்கும், பக்தர்களின் ஒழுக்கத்திற்கும் சான்றாக இந்தக் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ‘ஆனந்த் சாகர்’ என்னும் ஆன்மீக மற்றும் புத்துணர்வு தரும் மையத்தை ஸ்ரீ கஜானன் மஹாராஜ் மந்திர் ட்ரஸ்ட் நடத்தி வருகிறது.

ஆனந்த் சாகரில் ஆன்மீக மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறவிகளின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 

நம் தமிழ்நாட்டில் இருந்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோர்களின் சிலைகளை இந்த டிரஸ்ட்டினர் வைத்துள்ளனர். உட்கார்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள சிலையில் திருவள்ளுவரின் வலது கையில் எழுதுகோலும், இடது கையில் ஏடும் வைத்திருப்பதைப் போல பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

 ‘மனைவியே இல்லத்தின் திருமகள். எந்த இல்லத்தில் திருமகள் மகிழ்ச்சியாக இருக்கிறாளோ அந்த இல்லத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்’  என்று திருவள்ளுவரின் சிலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை மையமாக வைத்து  மேற்கூரிய வரிகளை திருவள்ளுவரின் சிலையில்  பொறித்துள்ளார்கள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ் கோயிலில் ஒவ்வொரு விசேஷ தினத்திற்கும் லட்சணக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் ஒரு முறை கூட கூட்ட நெருக்கடியால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இக்கோயிலில்  பதிவானது கிடையாது என்பதே ஒரு வரலாறு தான். சீரான பராமரிப்பு, சிறப்பான திட்டமிடல் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்கும் சுய ஒழுக்கம் ஆகியவையின் பலனாகவே இது சாத்தியமாகிறது. பக்தர்களின் கூட்டத்தினை மேலாண்மை செய்வதில் இந்தக் கோயில் நம் நாட்டிற்கே ஒரு முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது.

போட்டோ: தீபக் சுரோசே, ஷேகாவ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories