மஹாராஷ்டிராவில் திருவள்ளுவருக்கு சிலை

thiruvalluar in maharashtra - 2026
ஷேகாவில் உள்ள தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை 

– ஜெயஸ்ரீ எம். சாரி 

மஹாராஷ்டிர மாநிலத்தில் புல்டானா மாவட்டத்தில் ஷேகாவ் என்னும் இடத்தில் நம் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில்  துறவிகளுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவ்வாறான துறவிகளில் ஒருவர் தான் ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ். அவருடைய கோயிலானது ஷேகாவ் என்னும் புனித நகரில் உள்ளது.

ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் தரிசிக்கும் இடமாக இக்கோயில் இருப்பினும் சுத்தத்திற்கும், பக்தர்களின் ஒழுக்கத்திற்கும் சான்றாக இந்தக் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ‘ஆனந்த் சாகர்’ என்னும் ஆன்மீக மற்றும் புத்துணர்வு தரும் மையத்தை ஸ்ரீ கஜானன் மஹாராஜ் மந்திர் ட்ரஸ்ட் நடத்தி வருகிறது.

ஆனந்த் சாகரில் ஆன்மீக மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறவிகளின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 

நம் தமிழ்நாட்டில் இருந்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோர்களின் சிலைகளை இந்த டிரஸ்ட்டினர் வைத்துள்ளனர். உட்கார்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள சிலையில் திருவள்ளுவரின் வலது கையில் எழுதுகோலும், இடது கையில் ஏடும் வைத்திருப்பதைப் போல பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

 ‘மனைவியே இல்லத்தின் திருமகள். எந்த இல்லத்தில் திருமகள் மகிழ்ச்சியாக இருக்கிறாளோ அந்த இல்லத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்’  என்று திருவள்ளுவரின் சிலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை மையமாக வைத்து  மேற்கூரிய வரிகளை திருவள்ளுவரின் சிலையில்  பொறித்துள்ளார்கள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீ சந்த் கஜானன் மஹாராஜ் கோயிலில் ஒவ்வொரு விசேஷ தினத்திற்கும் லட்சணக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் ஒரு முறை கூட கூட்ட நெருக்கடியால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இக்கோயிலில்  பதிவானது கிடையாது என்பதே ஒரு வரலாறு தான். சீரான பராமரிப்பு, சிறப்பான திட்டமிடல் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்கும் சுய ஒழுக்கம் ஆகியவையின் பலனாகவே இது சாத்தியமாகிறது. பக்தர்களின் கூட்டத்தினை மேலாண்மை செய்வதில் இந்தக் கோயில் நம் நாட்டிற்கே ஒரு முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது.

போட்டோ: தீபக் சுரோசே, ஷேகாவ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories