80 ஆண்டுகளுக்கு முன்… வரலாற்றில் இன்று! தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப் பிரவேசம் (8-7-1939)

pasumpon thevar - 2026

வரலாற்றில் இன்று: தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப்பிரவேசம் ஜூலை 8 -1939

1939 ஜூலை 8 -ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.

அப்போது மதுரை மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக தியாகி வைத்தியநாத ஐயர் இருந்தார். இராமநாதபுரம் மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக பசும்பொன் தேவர் இருந்தார்.

காங்கிரஸில் வலதுசாரி, இடதுசாரி என பலப் பரீட்சை நடந்துகொண்டிருந்த நேரம் அது! காந்தியை ஆதரித்த ராஜாஜி தமிழ்நாட்டில் வலதுசாரிகளின் தலைவர். நேதாஜியை ஆதரித்த தேவர் தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் தலைவர்.

வைத்தியநாத ஐயர் ராஜாஜியின் சீடர். எனவே வைத்தியநாத ஐயரின் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப்பிரவேசம் என தெரிந்தவுடன், அதை முறியடிக்க சனாதனி இந்துக்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். எனவே ஆலயப் பிரவேசத்தை சுமூகமாக நடத்திட விரும்பிய வைத்தியநாத ஐயர் மதுரை எட்வர்டு ஹாலில் ஒரு ஆலோசனை மாநாடு நடத்தினார்.

அதில் ராஜாஜி, தேவர், ராமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் ராஜாஜி, அரிஜனங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டிய தேவர் தான். எனவே அவரை பேச அழைக்கின்றேன் என்றார்.dinamaninews abt devar temple enter - 2026

தேவர் பேசும்போது, ஆலயப் பிரவேசம் செய்யும் என் அரிஜன சகோதரர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என உறுதி கூறினார். அவர் உறுதி கூறிய செய்தி காட்டுத்தீபோல் பரவியது.

மதுரையை சுற்றியுள்ள இளைஞர்கள், உசிலம்பட்டி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஊர்களிலுள்ள இளைஞர்களெல்லாம் ஆயிரக்கணக்கில் மதுரையில் வந்து குவிந்தனர். ஆலயப் பிரவேசம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கோவில் வாசல் வரை பத்து அடிக்கு ஒருவரென ராணுவ வீரர்கள் போல் இருபுறமும் வரிசையாக நின்றனர்.

நாட்டுத்தலைசிகள் எனப்படும் கிராமத்தலைவர்கள் ஊர்வலமாக வந்தவர்களோடு சேர்ந்து வந்தார்கள். ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆலயப் பிரவேசம் செய்திட்ட அனைவரும் பத்திரமாக வீடுகளுக்கு போய்ச் சேர்ந்தனர் என்ற தகவல் கிடைத்த பின்பு தான் அந்த இளைஞர்கள் அனைவரும் ஊர் திரும்பினர்.

  • திருப்பதி பெரியதம்பி

1 COMMENT

  1. பசும்பொன் தேவர் அய்யா, மதுரை வைத்யநாத ஐயர் போன்ற மேல் சாதிக்காரர்கள் தான் அரிசனங்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்துள்ளனர். ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டு ஏதோ பிராமணர்களும் மற்ற உயர் சாதியினரும் தாழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெயர் என்னவோ வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு தான். மற்றவர்கள் ஒன்றுமே செய்யாத மாதிரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories