spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனை80 ஆண்டுகளுக்கு முன்... வரலாற்றில் இன்று! தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப் பிரவேசம் (8-7-1939)

80 ஆண்டுகளுக்கு முன்… வரலாற்றில் இன்று! தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப் பிரவேசம் (8-7-1939)

- Advertisement -

வரலாற்றில் இன்று: தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி ஆலயப்பிரவேசம் ஜூலை 8 -1939

1939 ஜூலை 8 -ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.

அப்போது மதுரை மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக தியாகி வைத்தியநாத ஐயர் இருந்தார். இராமநாதபுரம் மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக பசும்பொன் தேவர் இருந்தார்.

காங்கிரஸில் வலதுசாரி, இடதுசாரி என பலப் பரீட்சை நடந்துகொண்டிருந்த நேரம் அது! காந்தியை ஆதரித்த ராஜாஜி தமிழ்நாட்டில் வலதுசாரிகளின் தலைவர். நேதாஜியை ஆதரித்த தேவர் தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் தலைவர்.

வைத்தியநாத ஐயர் ராஜாஜியின் சீடர். எனவே வைத்தியநாத ஐயரின் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப்பிரவேசம் என தெரிந்தவுடன், அதை முறியடிக்க சனாதனி இந்துக்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். எனவே ஆலயப் பிரவேசத்தை சுமூகமாக நடத்திட விரும்பிய வைத்தியநாத ஐயர் மதுரை எட்வர்டு ஹாலில் ஒரு ஆலோசனை மாநாடு நடத்தினார்.

அதில் ராஜாஜி, தேவர், ராமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் ராஜாஜி, அரிஜனங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டிய தேவர் தான். எனவே அவரை பேச அழைக்கின்றேன் என்றார்.

தேவர் பேசும்போது, ஆலயப் பிரவேசம் செய்யும் என் அரிஜன சகோதரர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என உறுதி கூறினார். அவர் உறுதி கூறிய செய்தி காட்டுத்தீபோல் பரவியது.

மதுரையை சுற்றியுள்ள இளைஞர்கள், உசிலம்பட்டி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஊர்களிலுள்ள இளைஞர்களெல்லாம் ஆயிரக்கணக்கில் மதுரையில் வந்து குவிந்தனர். ஆலயப் பிரவேசம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கோவில் வாசல் வரை பத்து அடிக்கு ஒருவரென ராணுவ வீரர்கள் போல் இருபுறமும் வரிசையாக நின்றனர்.

நாட்டுத்தலைசிகள் எனப்படும் கிராமத்தலைவர்கள் ஊர்வலமாக வந்தவர்களோடு சேர்ந்து வந்தார்கள். ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆலயப் பிரவேசம் செய்திட்ட அனைவரும் பத்திரமாக வீடுகளுக்கு போய்ச் சேர்ந்தனர் என்ற தகவல் கிடைத்த பின்பு தான் அந்த இளைஞர்கள் அனைவரும் ஊர் திரும்பினர்.

  • திருப்பதி பெரியதம்பி

1 COMMENT

  1. பசும்பொன் தேவர் அய்யா, மதுரை வைத்யநாத ஐயர் போன்ற மேல் சாதிக்காரர்கள் தான் அரிசனங்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்துள்ளனர். ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டு ஏதோ பிராமணர்களும் மற்ற உயர் சாதியினரும் தாழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெயர் என்னவோ வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு தான். மற்றவர்கள் ஒன்றுமே செய்யாத மாதிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe