ழகரச் சிந்தனை! புதிய புணர்ச்சி விதி எழுதும் நவீன இலக்கணத் தமிழன்!

tamil - 2026

தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்… ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன்.

காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக் கொண்டு கிளைத்த மலையாளத்தில் சிறப்பு ழகரம் சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. வரிவடிவமும் கூட பெரிய மாற்றம் ஏதுமில்லை. താഴ தாழ நோக்காது, நிமிர்ந்து நோக்கினால், ഴ – ழ அங்கே எப்படி அழகாக உச்சரிக்கப் படுகிறது என்று புரியும்! அதற்காக மலையாள நாட்டார் எவரும் ழ எங்கள் சிறப்பு என்று சொல்லித் திரிவதில்லை. ஆனால், நாமோ, ழவை லவ்வாக்கி, ளவ்வாக்கி குளறுகிறோம்…

க,ச,ட,த,ப எனும் ஐந்து எழுத்துகளும் வரிவடிவில் ஒன்றாக இருந்தாலும் உச்சரிப்பில் பழக்கத்தால் வேறுபாட்டை உணர்த்தும். இது தமிழின் பலம். கணினித் தமிழுக்கும், செல்போன் தமிழ் தட்டச்சுக்கும் மிகப் பெரும் பலமாக இருக்கிறது. ஆனால்… இப்போது நாம் உச்சரிப்பில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்!

நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப…ன்னு இருக்குற மொழிகள்ல இப்போதும் உச்சரிப்பு மிகச் சரியாக இருப்பதாகவே படுகிறது. இதைத்தான் கோட்டை விட்டாலும், மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேறுபாடு உச்சரிப்பு கொண்ட ல,ள,ழ., ந,ன,ண, ர,ற, இவற்றையாவது காப்பாற்ற வேண்டாமோ?

இன்று ழகரத்தின் ஓசையை யகரமாக்கி நவீன உச்சரிப்பைக் கையாண்டு வருகிறார்கள் நவீனத் தமிழர்கள். இலக்கண வகுப்பில் புணர்ச்சிவிதி படிக்கும் மாணவன் என்றால் மனப்பாடம் செய்து கொண்டிருப்பான்… லள றடவும்…. என்று! இப்போது புதிய ஓர் எழுத்தும் அதில் சேர்ந்திருக்கிறது.. லளழ றடயவும் என்பதுதான்..

அதாவது, கல் + சிலை = கற்சிலை என்றும், வாள் + போர் = வாட்போர் என்றும் வருவது போல், இப்போதெல்லாம் ஊழ் + வினை = ஊய்வினை என்றே புத்திலக்கணம் படைத்து வருகிறார்கள் நவீனத் தமிழர்கள்.

தமிழா விழி!
விளிக்காதே.. விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories