December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

மகாத்மா காந்தியின் மகத்தான பேருரை…

mahatma gandhi - 2025

மகாத்மா காந்தி யங் இந்தியாவில் நாட்டு விடுதலைக்காக ஒரு கட்டுரை எழுதினார். இதைப் படித்த ஆங்கிலேய அரசு காந்தியின் மீது 124அ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.

அரசு வழக்கறிஞர் அமைதியாக வாழும் மக்கள் தேசத் துரோக நடவடிக்கைகளில் இடுபடத் தூண்டும் கட்டுரை எழுதி வெளியிட்ட காந்திக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க நீதிபதியிடம் முறையிட்டார்.

அப்போது நீதிபதி”நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று காந்தியிடம் கேட்டார். அப்போது காந்தி கால அவகாசம் கேட்டார்;காரணம் தனக்காக வாதிட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் தானே வாதிட விரும்பினார். நீதிபதியும், காந்திக்கு கால அவகாசம் கொடுத்து எழுதிக் கொண்டு வந்து படிக்கச் சொன்னார்.

1922,மார்ச் 3 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி உரையோடு அகமதாபாத் நீதிமன்றம் சென்றார். அவரோடு கஸ்தூரிபாய் காந்தி உட்பட 250 பேர்கள் சென்றார்கள்.நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் மகாத்மா காந்தி தன் பேருரையை ஆற்றினார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகள்….

“நான் இந்த அறிக்கையை வாசிப்பதற்கு முன்பாக என்னைப் பற்றி அறிவுசால் அட்வகேட் ஜெனரல் கூறிய அனைத்தையும் வழிமொழிகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்பிகின்றேன்.அவர் முன் வைத்த கருத்துக்கள் மிக உண்மையானவை.

மக்கள் மனதில் அரசின் மீதான அதிருப்தியை உருவாக்குவதே என் தீவிர வேட்கையாக இருக்கிறது என்று அவர் கூறியது முற்றிலும் உண்மை.யங் இந்தியாவுடனான என் தொடர்பிலிருந்து இந்த அதிருப்தி ஆரம்பமாகவில்லை என்று அவர் குறிப்பிட்டிருப்பதும் முற்றிலும் சரி.அதற்கு முன்பிருந்தே ஆரம்பமாகிவிட்ட அதிருப்திதான் அது.

நான் இப்போது வச்சிக்கப்போகும் தன்னிலை விளக்க அறிக்கையில் மேற்குறிப்பிட்ட ‘அரசின் மீதான அதிருப்தி’ அட்வகேட் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ள காலகட்டத்திற்கு வெகுமுன்பாகவே ஏற்பட்டுவிட்டது என்ற வேதனையான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கடமையை நிறைவேற்றிருக்கிறேன்.

பம்பாய் நிகழ்வுகள்,மெட்ராஸ் நிகழ்வுகள், செளரி செளரா நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிக்குமான பொறுப்பேற்பைக் கற்றறிந்த அட்வகேட் ஜெனரல் எனது தோளின்மீது சுமத்தியிருப்பதையும் நான் ஏற்றுகொள்கிறேன்.

எனவே நீதியரசே,மற்ற பெருந்தகைகளே! “உங்கள் முன் இருக்கும் வழி ஒன்றே ஒன்று தான். சட்டம் தீமைக்குத் துணை போகும்படி உங்களை உந்துவதாக நீங்கள் கருதினால், இந்தத் தேசத்துரோகச் சட்டம் ஒரு தீய காரியத்தை செய்வதாக நீங்கள் நினைத்தால், நான் உண்மையில் குற்றமற்றவன் என்று நீங்கள் எண்ணினால் உங்கள் பதவிகளை ராஜினாமா செய்து உங்களைத் தீமையிலிருந்து விலக்கிக்
கொள்ளுங்கள்.

இல்லை, இந்த அரசு நிர்வாகமும், சட்டமும் இந்த நாட்டின் மக்களுக்கு நல்லது செய்யவே உள்ளதாகவும், அவ்வளவில் என்னுடைய செயல்பாடுகள் பொதுநலனுக்கு எதிராக உள்ளதாகவும் நீங்கள் கருதினால் தேசத் துரோகச் சட்டத்தின்படி உச்சபட்ச தண்டனையை எனக்குத் தாருங்கள்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories