திருமுறைக்குப் பெருமை- சிங்கப்பூருக்கும் பெருமை!

singapore cholan4 - 2026

கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.

திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற நம்பி ஆண்டார் நம்பி கலை சொட்டும் சிலையாக வந்தார்-கரையானால் அரிக்கப் பட்ட திருமுறைகளை மீட்க மன்னன் இராஜராஜன் சர்வலங்காரனாகக் காட்சி தந்தான்.. தில்லைப் பதி சென்ற அவர்களிடம் . தமிழ் மூவர் வந்தால் மட்டுமே பூட்டிக் கிடக்கும் அறை திறக்கப்படும் என்ற நிபந்தனை தெரிவிக்கப் படுகிறது., மதிநுட்ப மன்னன் அதைத் தீர்த்து வைக்க, திறக்காத கதவு திறக்கப்படுகிறது. அங்கே திருமுறை மற்ற ஓலைகள்…அத்தனையும் நம்பியிடம் ஒப்படைக்க சைவப் பயணம் தொடர்கிறது.
குடந்தை ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவினரின் திறன் சொட்ட உருவான ‘திருமுறை கண்ட சோழன்’ பொம்மலாட்ட நாடகம், உள்ளூர் தமிழ் மக்களுக்கு உரமான பொழுதுபோக்காக அமைந்தது. தமிழ் மொழி மாதத்தை ஒட்டி, வளர் தமிழ் இயக்கமும், சியாமா இசை அமைப்பும் இணைந்து படைத்த நிகழ்ச்சி இது.\singapore cholan3 - 2026

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

’வர வேண்டும் வர வேண்டும் கணபதியே’என்ற நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் ஒரு துதிப் பாடலுடன் தொடங்கும் இந்த ஒன்றரை மணி நேர பாவைக் கூத்தில் , உயிர்த் துடிப்போடு பாத்திரங்கள் தத்ரூபம் குறையாமல் நெளிந்து, வளைந்து ஆடிப் பாடிப் பேசி அமர்க்களம் செய்தன. 7 பேர் கொண்ட கலைஞர்கள் பின்னணியில் அதனை ஆட்டி வைத்த அழகு பாராட்டுக் குரியது. இவர்களன்னியில் உள்ளூர் பாடர்களும், மற்ற பல உத்தியாளர்களும் தங்கள் பங்கை செய்தனர்.

நான் (ஏ.பி.ராமன்) நிகழ்ச்சிக்கு முன்னிலை! அனைவருக்கும் மரியாதை செய்யச் சொன்னார்கள். அத்தோடு விட்டார்களா? கும்பகோணத்துக்காரர்கள் தன் அழகுப் பதுமையின் கையில் மாலை ஒன்றைத் தந்து என் கழுத்தில் போடச் செய்தனர். அதற்கு ‘மாலை போடவா-மாலை போடவா’ பாட்டும் உண்டு. எதிர்பாராத மரியாதை தான். . பெண் பாவை ஒன்று என்னைக் கட்டி அணைத்து, கொஞ்சி விளயாடி மாலை இட்டு மகிழ்ந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னையும் மேலிருந்து கயிற்றால் ஆட்டி வைக்கிறார்களா என்ற சந்தேகத்துடன் மேல் நோக்கிக் கண்ணோட்டமிட்டேன். கை-கால்-கழுத்து-தலை என முறுக்கேறிய கயிறுகளால் தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு, அக் கலைஞர்கள் துல்லியமாகப் பொம்மைகளை ஆட்டி வைத்த அழகே அழகு!

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சில திரைக் காட்சிகள் அருமை. சோழ மன்னனின் அரண்மனை, தஞ்சை பெரிய கோயில், தில்லை நடராஜன்…அவர்களின் சிறிய திரையரங்கில் பிரம்மாண்டம் காட்டும் முயற்சி! முதல் நாள் என்பதாலோ என்னவோ, இசைப் பகுதி இணைந்து வரவில்லை. தேவாரத் திருவிசை இன்னும் மெருகேற்றப்படலாம். –

– ஏ.பி.ஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories