December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

திருமுறைக்குப் பெருமை- சிங்கப்பூருக்கும் பெருமை!

singapore cholan4 - 2025

கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.

திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற நம்பி ஆண்டார் நம்பி கலை சொட்டும் சிலையாக வந்தார்-கரையானால் அரிக்கப் பட்ட திருமுறைகளை மீட்க மன்னன் இராஜராஜன் சர்வலங்காரனாகக் காட்சி தந்தான்.. தில்லைப் பதி சென்ற அவர்களிடம் . தமிழ் மூவர் வந்தால் மட்டுமே பூட்டிக் கிடக்கும் அறை திறக்கப்படும் என்ற நிபந்தனை தெரிவிக்கப் படுகிறது., மதிநுட்ப மன்னன் அதைத் தீர்த்து வைக்க, திறக்காத கதவு திறக்கப்படுகிறது. அங்கே திருமுறை மற்ற ஓலைகள்…அத்தனையும் நம்பியிடம் ஒப்படைக்க சைவப் பயணம் தொடர்கிறது.
குடந்தை ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவினரின் திறன் சொட்ட உருவான ‘திருமுறை கண்ட சோழன்’ பொம்மலாட்ட நாடகம், உள்ளூர் தமிழ் மக்களுக்கு உரமான பொழுதுபோக்காக அமைந்தது. தமிழ் மொழி மாதத்தை ஒட்டி, வளர் தமிழ் இயக்கமும், சியாமா இசை அமைப்பும் இணைந்து படைத்த நிகழ்ச்சி இது.\singapore cholan3 - 2025

’வர வேண்டும் வர வேண்டும் கணபதியே’என்ற நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் ஒரு துதிப் பாடலுடன் தொடங்கும் இந்த ஒன்றரை மணி நேர பாவைக் கூத்தில் , உயிர்த் துடிப்போடு பாத்திரங்கள் தத்ரூபம் குறையாமல் நெளிந்து, வளைந்து ஆடிப் பாடிப் பேசி அமர்க்களம் செய்தன. 7 பேர் கொண்ட கலைஞர்கள் பின்னணியில் அதனை ஆட்டி வைத்த அழகு பாராட்டுக் குரியது. இவர்களன்னியில் உள்ளூர் பாடர்களும், மற்ற பல உத்தியாளர்களும் தங்கள் பங்கை செய்தனர்.

நான் (ஏ.பி.ராமன்) நிகழ்ச்சிக்கு முன்னிலை! அனைவருக்கும் மரியாதை செய்யச் சொன்னார்கள். அத்தோடு விட்டார்களா? கும்பகோணத்துக்காரர்கள் தன் அழகுப் பதுமையின் கையில் மாலை ஒன்றைத் தந்து என் கழுத்தில் போடச் செய்தனர். அதற்கு ‘மாலை போடவா-மாலை போடவா’ பாட்டும் உண்டு. எதிர்பாராத மரியாதை தான். . பெண் பாவை ஒன்று என்னைக் கட்டி அணைத்து, கொஞ்சி விளயாடி மாலை இட்டு மகிழ்ந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னையும் மேலிருந்து கயிற்றால் ஆட்டி வைக்கிறார்களா என்ற சந்தேகத்துடன் மேல் நோக்கிக் கண்ணோட்டமிட்டேன். கை-கால்-கழுத்து-தலை என முறுக்கேறிய கயிறுகளால் தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு, அக் கலைஞர்கள் துல்லியமாகப் பொம்மைகளை ஆட்டி வைத்த அழகே அழகு!

சில திரைக் காட்சிகள் அருமை. சோழ மன்னனின் அரண்மனை, தஞ்சை பெரிய கோயில், தில்லை நடராஜன்…அவர்களின் சிறிய திரையரங்கில் பிரம்மாண்டம் காட்டும் முயற்சி! முதல் நாள் என்பதாலோ என்னவோ, இசைப் பகுதி இணைந்து வரவில்லை. தேவாரத் திருவிசை இன்னும் மெருகேற்றப்படலாம். –

– ஏ.பி.ஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories