வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு

book release new - 2026

கூடலூர்: கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கூடலூர் அழகிய சுந்தர வேலவர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை யாசிரியர் பொ. கதிரேசன் தலைமை தாங்கினார். கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சி. சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.

தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி நூலை வெளியிட, முதல் பிரதியினைத் தமிழ்நாடு தொல்லியல் கழக உறுப்பினர் கா. இராமர், இரண்டாம் பிரதியினை சென்னையைச் சேர்ந்த சா. அக்கீம், மூன்றாம் பிரதியினை பி.ஏ. ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டிமன்றப் பேச்சாளர் ச. சேதுமாதவன் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன், கவிஞர் ஞானபாரதி, பி. புதுராஜா, சி. ராஜீவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கூடலூர் வர்த்தகர் சங்கப் பொருளாளர் சு. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

இவ்விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, “சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சென்று வழிபாடு செய்து வரும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கேற்றதாக மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதி புதுப்பித்துக் கட்டப்படுவதுடன், அங்கு சென்று வருவதற்கான சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

மேலும், மங்கலதேவி கண்ணகி கோட்டம் புதுப்பிக்கப்பெற்றுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், அறுபது ஆண்டுகளாக அது குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்தும், வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்தும், மங்கலதேவி கண்ணகிக்கும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்துக்கும் பெரும்புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் இரா. கணபதிராசன் என்ற தமிழாதனுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்றார். முடிவில் எழில் அன்பன் நன்றி கூறினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories