வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு

book release new - 2026

கூடலூர்: கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கூடலூர் அழகிய சுந்தர வேலவர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை யாசிரியர் பொ. கதிரேசன் தலைமை தாங்கினார். கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சி. சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.

தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி நூலை வெளியிட, முதல் பிரதியினைத் தமிழ்நாடு தொல்லியல் கழக உறுப்பினர் கா. இராமர், இரண்டாம் பிரதியினை சென்னையைச் சேர்ந்த சா. அக்கீம், மூன்றாம் பிரதியினை பி.ஏ. ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டிமன்றப் பேச்சாளர் ச. சேதுமாதவன் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன், கவிஞர் ஞானபாரதி, பி. புதுராஜா, சி. ராஜீவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கூடலூர் வர்த்தகர் சங்கப் பொருளாளர் சு. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, “சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சென்று வழிபாடு செய்து வரும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கேற்றதாக மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதி புதுப்பித்துக் கட்டப்படுவதுடன், அங்கு சென்று வருவதற்கான சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

மேலும், மங்கலதேவி கண்ணகி கோட்டம் புதுப்பிக்கப்பெற்றுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், அறுபது ஆண்டுகளாக அது குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்தும், வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்தும், மங்கலதேவி கண்ணகிக்கும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்துக்கும் பெரும்புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் இரா. கணபதிராசன் என்ற தமிழாதனுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்றார். முடிவில் எழில் அன்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories