December 5, 2025, 6:41 AM
24.9 C
Chennai

வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு

book release new - 2025

கூடலூர்: கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கூடலூர் அழகிய சுந்தர வேலவர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை யாசிரியர் பொ. கதிரேசன் தலைமை தாங்கினார். கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சி. சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.

தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி நூலை வெளியிட, முதல் பிரதியினைத் தமிழ்நாடு தொல்லியல் கழக உறுப்பினர் கா. இராமர், இரண்டாம் பிரதியினை சென்னையைச் சேர்ந்த சா. அக்கீம், மூன்றாம் பிரதியினை பி.ஏ. ஜோசப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டிமன்றப் பேச்சாளர் ச. சேதுமாதவன் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன், கவிஞர் ஞானபாரதி, பி. புதுராஜா, சி. ராஜீவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கூடலூர் வர்த்தகர் சங்கப் பொருளாளர் சு. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, “சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சென்று வழிபாடு செய்து வரும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கேற்றதாக மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதி புதுப்பித்துக் கட்டப்படுவதுடன், அங்கு சென்று வருவதற்கான சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

மேலும், மங்கலதேவி கண்ணகி கோட்டம் புதுப்பிக்கப்பெற்றுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், அறுபது ஆண்டுகளாக அது குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்தும், வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்தும், மங்கலதேவி கண்ணகிக்கும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்துக்கும் பெரும்புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் இரா. கணபதிராசன் என்ற தமிழாதனுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்றார். முடிவில் எழில் அன்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories