வைரமுத்துவை கைது செய்ய வேண்டும்! முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கோரிக்கை !

mustabha e1564395774418 - 2026கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெறுகிறது.

அந்த நூலில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தப்பா, அந்த நூலை தடை செய்வதுடன் வைரமுத்துவையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் , இந்த நூலில் கம்பராமாயணத்திற்கும் கம்பனின் வார்த்தைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் சுக்ரீவனின் வேண்டுகோளுக்கிணங்க ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான் என்பது புராணம். varamuthu - 2026இதில் என்னை ஏன் மறைந்திருந்து கொன்றாய் என்று வாலி ராமாயணத்தில் ராமரைக் கேட்டதுடன் சீதையை பிரிந்ததால் உன் மதிமயங்கி இச்செயலை செய்தாயோ என்று வாலி கேட்டதைக் குறிப்பிட்டு, ராமன் மதி மயங்கி, புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்த காரியம் என வைரமுத்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

மேலும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று கம்பன் சொல்வதாகவும், இபிகோ 84வது சட்டவிதியின் முன்னோடி என்று பேசி ராமனோடு சேர்த்து கம்பனையும் வைரமுத்து தனது நூலில் இழிவுபடுத்தியுள்ளார்.tamizhatrupadai - 2026ஏற்கனவே ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசி, அதன் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனை பற்றி அவதூறாக தனது தமிழாற்றுப்படை நூலில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளது கண்டனத்துகுரியது. இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவை காவல்துறை கைது செய்வதோடு, அவர் எழுதியுள்ள தமிழாற்றுப்படை நூலை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories