நதிகள் தந்த கலை!

river - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்

ஆடி மாதம் என்றவுடனே பாய்ந்து வரும் நதிகளே நமக்கு நினைவில் வருகின்றன. நதிகள் நமக்கு வாழ்வியலுக்கு தேவையான பல அற்புத விஷயங்களை விளக்குகிறது.

நதிகளானது பாகுபாடில்லாம் அனைவருக்கும் உபயோகமாய் இருப்பது, தன் பாதையில் வரும் சங்கடங்களையும் கடந்து, வேண்டாதப் பொருட்களையும் எடுத்துச் செல்வதையும் தனக்கு இடப்பட்ட ஒரு கடமையாகவே செய்கிறது. முன்னாலேயே பயணிக்கும் நதிகள் ஒரு போதும் பின்னோக்கி பார்ப்பதில்லை – ஆகியவை நதிகள் நமக்கு தரும் சில வாழ்வியல் தத்துவங்கள்.

நதிகள் இருக்கும் நகரங்களில் விவசாயத்திற்கு நல்ல வாய்ப்பு அமைகிறது. நதிகள் உள்ள இடங்களில் கால்நடைகளும் செழிப்பாக இருக்கும். கால்நடைகள் செழிப்பாய் இருந்தால் அந்நகரத்து மக்களின் வாழ்வு சிறக்கும் என்பது பெரியோர்களின் வாக்கு.

கடவுளின் அருளினால் என் வாழ்க்கையிலும் நதிகளின் பங்கு சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. இறைவன் என்னுள் வைத்த கலையை வளர்த்துக் கொள்ள அந்தந்த நகரங்களின் பாய்ந்தோடும் நதிகளின் தண்ணீரே உரமாய் இருந்து இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

பத்திரிகையாளராய், பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளராய் தேவையானவர்களுக்கு உதவும் போது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நான் எழுதிய ஒரு படைப்பை இங்கே பகிர்கிறேன்.

கரை புரண்டோடும் தாமிரபரணியில் ( திருநெல்வேலி) தவழ்ந்து
காவிரிக் கரைதனிலே ( மாயவரம்) கல்வியை பயின்றேனம்மா;
கரையில்லா கல்வியையும் கடலென கற்றேனம்மா;

கடமை பின்தொடர எந்தையும் என்னவரை-

காந்தி- வினோபா பாவே கர்ம பூமியில் (வர்தா) தேர்ந்தெடுக்க
கனிவாய் நானும் கணவரகம் புகுந்தேனம்மா;

கனிவான இந்தியும், மராட்டியும் எட்டாக்கனியாக; களைத்திருந்த எனக்கு கைகொடுத்தால் ஒரு சகி;

களைத்தெறிந்தேன் என்னுள் இருந்த இயலாமையை;
களிப்புடன் கற்றேன் அவ்விரு மொழிகளை;

கற்ற மொழிகளினால் நாளிதழும் கைகொடுத்ததம்மா;
கருத்துடனே என் மொழிபெயர்ப்பினால் வளர்ந்தேனம்மா;

கவிதை நடையும் கைகொடுக்க களிப்படைந்தேனம்மா;

இப்போது கோதாவரி கரைதனில் இருந்து ( நாந்தேட்) நான்
கவிஞர்களுடன் கவிபாடும்
கொடுப்பினையும் பெற்றேனம்மா!

இது தான் நதிகளினால் நான் அடைந்த பயன்கள்

இதனால் நதிகளின் அருமையை அறிந்து நதிகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த என் படைப்புகளின் மூலம் முயற்சி செய்து வருகிறேன். இயற்கையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories