நண்பர்களின் பூமி!

friendship day - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.

காலச்சக்கரம் விரைவாக சுழல்கின்றது. ஆம்! 23 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் சேவாகிராம் சந்திப்பில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது. புதிய சூழ்நிலை, புது கலாச்சாரம், புது வாழ்வியல் முறை என அனைத்துமே புதுமையாய். நொடிகளை நகர்த்துவதே பெரிதாய் இருந்தது.

உள்ளூர் மொழியான மராட்டியும் வராது, இங்கு பரவலாக பேசப்படும் ஹிந்தியும் சரளமாக வராது.

என் வீட்டின் ஹாலில் பொருத்தியிருந்த தொலைபேசியில் அழைப்புகள் வரும் போதெல்லாம் நான் அடுத்த அறைக்கு படையெடுத்தேன். என் வீட்டிற்கு வருவோர்களின் ஹிந்தி தெரியுமா, ரொட்டி இட வருமா?,” – என்னும் இரண்டு அதிமுக்கிய கேள்விகளுக்கான என் பதில்கள் முறையே ‘ தோடா தோடா மாலும், தோடா தோடா ஆதா ஹை,’ என இருந்தன.

இதற்கிடையில் என் மராட்டிய சகி என்னை ஒரு மராட்டி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு ஒன்றும் விளங்க வில்லையென்றாலும் மராட்டியப் பெண்களின் உற்சாகம், கலகலப்பான சுபாவம், அவர்கள் செய்து கொண்ட ஸ்டைல் முதலியவற்றால் எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. நான் நான்கு சுவற்றில் இருந்து வெளியில் வந்ததே ஒரு திருப்தியாய் இருந்தது.

நாட்கள் கடந்தன. கடவுளின் அருளால் என் இரண்டு மகன்கள் பிறந்த பிறகு நான் என் நட்பு வட்டத்தின் விட்டத்தினை பெருக்கிக் கொள்ளத் தொடங்கினேன்.
என்னுடைய நட்பு வட்டத்தில் அனைவருமே இணைந்தனர். சிறார்கள் என் மொழிப் பிரச்சனையை, வார்த்தைகளின் உச்சரிப்பை திருத்தினர். என் வயதுடையோரோ பல விஷயங்களில் எனக்கு உதவினர். ஆண் நண்பர்களோ என்னை மராட்டியில் அவர்களுடன் பேச உற்சாகப்படுத்தினர். பெரியவர்களோ மராட்டிய – தமிழ் கலாச்சாரம் பற்றி நிறைய கலந்துரையாடினர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சில இடங்களில் வசித்ததிலும் அங்கெல்லாம் அருமையான தோழமை வட்டம் எனக்கு கிடைத்தது.

இவ்வாறு, எனக்கு அமைந்துள்ள நட்பினால் நான் இந்த நண்பர்களின் பூமியில் என் வாழ்க்கையை அருமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் வருங்காலத்திலும் இப்படியே தொடரும் என்று என் நண்பர்களின் பூமியே எனக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ – என்ற நம் கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில் தான் எத்தனை வலிமை!! எத்தனை உண்மை!! வாழ்க நம் பாரத திருநாடு!!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories