February 22, 2026, 4:15 AM
25.6 C
Chennai

ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!

vinayakampillai letter
vinayakampillai letter

22.11.2006ல் தென்காசி – சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், ஊத்துமலை ஜமீன் குறித்த பல கதைகள்; இருதாலய மருதப்ப தேவர் குறித்த சங்கதிகள்; அவருடன் அவைப்புலவராக இருந்த ‘காவடிச் சிந்து’ புகழ் அண்ணாமலை ரெட்டியார் குறித்த தகவல்கள் என பலதும் பகிர்ந்து கொண்டார். அவற்றில் ஓரிரண்டை அப்போது நான் மஞ்சரி இதழின் தீபாவளி மலரில் எழுதியிருந்தேன்.
அதன் பின்னர் ஒரு கடிதம் எழுதினார். இன்று யதேச்சையாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இந்தக் கடிதம். பத்திரமாக வைத்திருந்தது…

என் சிறிய தாத்தா, சேஷ ஐயங்கார் அருமையாகப் பாடுவாராம். என் அம்மாவும் சொல்லியிருக்கிறார்: ‘திருமணமாகி வந்த புதிதில் என்னை பாடச் சொல்லிக் கேட்பார். கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பிரியம் அவருக்கு..’ என்று!

இவரது கடிதம் படித்தபோது பிரமிப்பாக இருந்தது….
அவரது கடிதத்தில் இருந்து…

22.11.2006
இரா.உ. விநாயகம் பிள்ளை
சந்நிதித் தெரு, வீரகேரளம்புதூர், 627861
அன்பும் பண்பும் மிக்க ஸ்ரீராம் அவர்களுக்கு. நமது ஆண்டுமலரில் பிரசுரமானதில் இருந்து இசையைப் பற்றி எழுத தூண்டுகிறது.
உங்கள் தாத்தா திரு சேஷ ஐயங்கார் அவர்கள், நான் வேண்டும் போது பாடுவார்கள்.
பாடும் சுதியோ ராகலட்சணங்களோ ஸ்வர சஞ்சாரங்களோ ஒன்றும் பயின்றதில்லை.
அவர்களுக்கு மிக நன்றாய் பயின்று பயிற்சியான ராகம் காம்போதிதான். அதை பார்வார்கள். தேவார்மிர்தமாய் இருக்கும். கர்நாடக சங்கீதத்தில் ஒரு முதல் நிலை வித்துவான் பாடும் காம்போதி… அவர் பாடும் காம்போதியின் கால் தூசிக்கு காணாது.
மேல் ஸ்தாயி பஞ்சமம், கீழ் ஸ்தாயி பஞ்சமம், ஆதாரம் இப்படி மூன்று ஸ்தாயி, அனாயாசமாக சஞ்சரித்து ஓடும். அப்படிப்பாடுவார். இவர் எப்படிப் பாடுகிறார்… மற்றக் கலைகள் அறிவில் இருந்து தோன்றுகிறது, இசைக்கலை ஆன்மாவில் இருந்து தோன்றுகிறது. இதை கட்டுரையாக எழுதினால் பிரசுரிப்பீர்களா. எழுத வேண்டுகிறேன்.
இரா. உ. விநாயகம்பிள்ளை

***

பின்குறிப்பு:

அதன் பின்னர் அவரும் எழுதி அனுப்பவுமில்லை; நானும் எதுவும் எழுதவுமில்லை! நான் சந்தித்த பத்து வருடங்களுக்கு முன்பேயே தள்ளாத நிலையில் இருந்தார்….!

14.10.2016 இன்று பேசிய நண்பர் கழனியூரான், மேற்படி விநாயகம் பிள்ளை காலமாகிவிட்டதாகக் கூறினார்.
மேலும், அவர் குறித்த அபூர்வமான தகவல் ஒன்றையும் சொன்னார்.
எல்லோரும் திருக்குறளைத்தான் மனனம் செய்து சொல்வார்கள், ஆனால், வினாயகம் பிள்ளைவாள் ஒவ்வொரு குறளுக்குமான பரிமேலழகர் உரையினை மனனம் செய்தவர். எந்தக் குறள் குறித்துக் கேட்டாலும், அதற்கான பரிமேலழகர் உரையினை அட்சரம் பிசகாமல் சொல்வார்… என்று கூறினார்.
இவர் போன்றவர்கள் என்றென்றும் நம்மால் நினைவுகூரத்தக்கவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories