‘பசும்பொன்’னாய் ஜொலிக்கும் ‘வாஞ்சி’

vanchi statue - 2026

இதுதான் அடியேன் எழுதப் புகுந்த வியாசத்தின் தலைப்பு. எவ்வளவோ எழுதலாம் தான். ஆனால் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவலைக் காட்டிலும் பொய்களையே மென்றுகொண்டு வாட்ஸ்அப்பில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் மூடர்கூட்டமே நம்மைச் சுற்றி அதிகம் இருக்கின்ற காரணத்தால், இந்த வியாசத்தால் விளையப் போவது ஒன்றுமில்லை என்று என் சுவாசத்தைச் சற்றே எனக்குள் சுருக்கிக் கொண்டேன்.

செங்கோட்டை நகரில் பேருந்து நிலையம் முன்னுள்ள வீரவாஞ்சி சிலை, 1986ம் ஆண்டில், (வாஞ்சி உயிர்த்தியாகம் செய்த 75ஆண்டில் அவன் நினைவாக) இங்கே நிறுவப் பெற்றது. அப்போதே அது வெங்கலச் சிலை என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. அது குறித்த செய்திப் பதிவுகளிலும் வெங்கலச் சிலை ஒன்று வாஞ்சிக்காக தமிழக அரசால் அப்போது நிறுவப் பெற்றது என்று நாமும் எழுதியிருக்கிறோம்.

ஆனால் பின்னாளில் அந்த வெங்கலத்தின் மினுமினுப்பை நாம் பார்க்கவில்லை. கனத்த வாகனப் போக்குவரத்தின் அடர்த்தியான புகை மண்டலத்தினூடே நின்று கொண்டு, கையை உயர்த்தி, “வந்தேமாதரம், பாரதமாதாவுக்கே வெற்றி” என்று சதாசர்வ காலமும் முழங்கிக் கொண்டிருக்கும் வீரனின் முகத்தில் கட்டுக் கதைகளால் இந்த சமூகம் கரியைப் பூசிக் கொண்டிருக்க , காட்சிப் பொருளாய் நிற்கும் இந்த வெங்கலச் சிலையும் கரி படர்ந்து பொலிவு குன்றி ஏதோபோலானது..!

vanchi3 - 2026

தற்போது செங்கோட்டை நகர்மன்றத் தலைவி திருமதி ராமலட்சுமியின் சொந்தச் செலவில் இந்தச் சிலையை சுத்தம் செய்து, கசடு நீக்கி, கரியைப் போக்கி, வெங்கலத்தின் இயல்புத் தன்மைக்குக் கொண்டு வந்து, மேற்படி வண்ணம் பூசி இப்போது பசும்பொன்னாய் ஜொலிக்கிறது இந்த பாரதீயனின் முழு உருவச் சிலை.

பல நாட்களாய் திரையிட்டு மூடிக் கிடந்த இந்தச் சிலை, பாரதத்தின் 74ம் ஆண்டு குடியரசு தினத் தொடக்கத்தை முன்னிட்டு, இன்றைய நாளில் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப் பட்டது. காலை நேரத்தில் இந்தப் பகுதியைக் கடந்து சென்றபோது கவனம் ஈர்த்தது. கவனத்தைத் தன்மீதே இழுத்துக் கொண்டது.

vanchi7 - 2026

வாஞ்சியின் ஆக்ரோஷம் வெளிப்படும் முஷ்டி உயர்த்திய கையும் கனல் தெறிக்கும் கண்களின் கூர்மையும் நன்கு தெரியும் படியாய் இருப்பது சிறப்பு. தனிப்பட்ட வகையில் நகர்மன்றத் தலைவிக்கு நம் நன்றிச் செய்தியை செல்பேசியில் அனுப்பி வைத்தேன்!

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories