பாரதி பிறந்த நாள்: மதுரை சேதுபதி பள்ளியில்!

madurai-sethupathi-school-bharathi-statue
madurai-sethupathi-school-bharathi-statue

138 ஆவது பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிராமணர் சங்கத்தின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தலைமை : இல.அமுதன் , கிரிப் சிவகுமார் கோபாலகிருஷ்ணன் , யுகாதி சூரியா சர்மா மற்றும் கண்ணண் பாகவதர்

வாழ்க பாரதி வாழ்க பாரதி

கவிதை: பத்மன்

வானும் வையமும் வாழும் வரையினில்
வாழும் பாரதி பெருமையே
நீரும் நிலமும் சூழும் வரையினில்
சூழும் பாட்டுத் திறமையே
தீயும் வளியும் நீளும் வரையினில்
நீண்டு வழியைக் காட்டுமே
ஊனில் உயிரும் உறையும் வரையினில்
ஊக்கம் தந்து காக்குமே

வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே

அன்னை விலங்கை அறுத்து எறிய
ஆவேசப் பாக்கள் பொழிந்தவன்
முன்னைப் பெருமையை மீட்டுக் கொடுக்க
மூண்ட சுடராய் ஜொலித்தவன்
தன்னைப் பற்றிய எண்ண மின்றி
தாய்நாட் டுக்கென்றே உழைத்தவன்
பின்னை பாரதம் பீடு பெற்றிட
பேணும் நல்லறம் விதைத்தவன்

வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே

தமிழன் உணரா தமிழின் அருமையை
தரணி அறிய மொழிந்தவன்
தமிழின் உணர்வொடு தேசப் பற்றும்
தழைத்து ஓங்கிடப் புரிந்தவன்
தமிழில் மற்றவர் தகுந்த சாத்திரம்
தரமாய் பெயர்த்திட உரைத்தவன்
தமிழில் பேசி தமிழில் எழுதி
தமிழன் பெருமை காத்தவன்

வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே

பெண்ணின் அடிமை விலங்கை உடைத்து
பெருமை பொங்கச் செய்தவன்
மண்ணில் வாழும் மனிதர் யாவரும்
மகிமை ஓங்க நினைத்தவன்
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
மடமைத் தனத்தை வெறுத்தவன்
புனிதர் ஆக நம்மை உயர்த்த
புலமை அனைத்தும் கொடுத்தவன்

வாழ்க பாரதி வாழ்க பாரதி
வாழ்க பாரதி நாமமே
வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
வாழ்க வையகம் வாழ்கவே

தகிட தகதிமி தகிட தகதிமி
தகிட தகதிமி தகிடதோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories