குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருந்ததால், போலீஸார் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்.