December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

பசி கைது எதிரொலி! ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார்! அமைச்சர் ஜெயக்குமார்!

jayakumar - 2025

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து பேசுவது கிடையாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள், அரசு சார்பில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அமைச்சர், ஜெயக்குமார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது

jayakumar 2 - 2025

திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்த அளவில், சிதம்பரம் கைதுக்குப் பிறகு அவரது குரல் ரொம்பவே மென்மையாகி விட்டது. ஏனெனில் அடுத்தது நீங்கள்தான்.. என்ற ஒரு பயம் வந்துவிட்டது. எனவே நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள, பொது வினியோகத் துறை விவகாரத்தில் சாதாரணமாக ஒரு குரல் கொடுத்துள்ளார்

ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியை எடுத்து திருப்பி போட்டு பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பொது வினியோகத் துறை தொடர்பாக லேசாக ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

jayakumar 1 - 2025

தமிழகத்தில் பொது விநியோகத் துறை என்பது மிகவும் வலிமையாக உள்ளது. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு குக்கிராமத்தில் கூட ரேஷன் கடைகள் நிறுவப்பட்டு, பொது மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என வநதாலும், தமிழக மக்கள் இப்போது என்னென்ன ரேஷன் பொருட்களை வாங்குகிறார்களோ அதே பொருட்கள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதே நேரம் வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து ரேஷன் பொருள் வாங்குவோருக்கு விலையில்லா அரிசி வழங்கப்படாது. சிறு அறிக்கை பொது விநியோகத் திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

jayakumar 1 1 - 2025

இது ஸ்டாலினுக்கும் தெரியும். இருப்பினும் மத்திய அரசுக்கு எதிராக, நானும் அறிக்கை விட்டேன் என்பதை காட்டிக்கொள்ள, ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இனிமேல் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக அவர் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories