December 6, 2025, 3:05 AM
24.9 C
Chennai

நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது

சென்னை :

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள் சமர்ப்பிக்க தவறிய, வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் நிறுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் மானியத்தை தனி வங்கி கணக்கு ஒன்றில் எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.

வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் நேரடி கியாஸ் மானியம் பெற காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டு உள் ளது. அதற்குள் ஆதார் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட சமையல் கேஸ் மானியத்தை திரும்ப வழங்குவதுடன், வரும் காலத்திற்கான சிலிண்டர் மானியமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சத்து 63 ஆயிரமும், புதுச்சேரியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேரும் மானியம் பெறுகின்றனர்.இவர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 1-ந் தேதி வரை ரூ.3 ஆயிரத்து 877 கோடியும், புதுச்சேரியில் ரூ.80 கோடியே 73 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆதார் எண்கள் சமர்ப்பித்து உள்ள சமையல் கேஸ் சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு ஆண்டில் வீடு ஒன்றுக்கு மானிய விலையில் 14.2 கிலோ எடைகொண்ட 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் நேரடியாக தனிநபர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மானியம் தேவையில்லை என்று கூறி உள்ள வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories