நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது

சென்னை :

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள் சமர்ப்பிக்க தவறிய, வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் நிறுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் மானியத்தை தனி வங்கி கணக்கு ஒன்றில் எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.

வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் நேரடி கியாஸ் மானியம் பெற காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டு உள் ளது. அதற்குள் ஆதார் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட சமையல் கேஸ் மானியத்தை திரும்ப வழங்குவதுடன், வரும் காலத்திற்கான சிலிண்டர் மானியமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சத்து 63 ஆயிரமும், புதுச்சேரியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேரும் மானியம் பெறுகின்றனர்.இவர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 1-ந் தேதி வரை ரூ.3 ஆயிரத்து 877 கோடியும், புதுச்சேரியில் ரூ.80 கோடியே 73 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆதார் எண்கள் சமர்ப்பித்து உள்ள சமையல் கேஸ் சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு ஆண்டில் வீடு ஒன்றுக்கு மானிய விலையில் 14.2 கிலோ எடைகொண்ட 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் நேரடியாக தனிநபர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மானியம் தேவையில்லை என்று கூறி உள்ள வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories