December 6, 2025, 4:51 AM
24.9 C
Chennai

தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்!

சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான்.

சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள்.

இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார்.  இவரது இயற்பெயர் பிரஷாந்த் ஜெயக்குமார். சினிமாவுக்காக பிரஷ்.

பிறப்பால் சென்னைக்காரரான இவருக்கு, சிறுவயது முதல் சினிமா ஆர்வம். ஆனால் நெருங்க முடியவில்லை. இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார். அங்குள்ளபல்கலைக் கழகத்தில் அறிவியலில் முதுகலைப் பட்டம் எம்.எஸ்ஸி முடித்தார்.வேலை நிமித்தமாக கனடா போனார் அங்கு சில ஆண்டுகள் தங்கினார். அவருக்குள்’நீறுபூத்த நெருப்பு’ போல கனன்று கொண்டிருந்த சினிமா ஆர்வம் தலைதூக்கி ஒரு கட்டத்தில் தலைவிரித்தாடவே, தன்னைச் சினிமாவுக்கு முழுத் தகுதியாக்கிக்கொள்ள விரும்பினார்.

அங்குள்ள ‘சிட்டாடல் தியேட்டர்ஸ் அகாடமி’ என்கிற ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புப் பயிற்சி பெற்றார். அதுமட்டுமல்ல ‘சக்சஸ் லைப் ஒர்க்ஷாப்’ பில் திரைக்கதை எழுதும்பயிற்சியும் பெற்றார். அவர் நடிப்புப் பயிற்சி முடித்ததும்  கனடாவில்  ஒரு படத்துக்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டார். ஆச்சரியம் என்ன வென்றால் பிரஷ்தேர்வாகி விட்டார். அந்தப் படத்தில் முக்கிய வேடமும் ஏற்றார். அந்தப் படம்தான் ‘வித்தின் சர்க்கிள்ஸ்'( WITHIN CIRCLES) என்கிற  கனடியப்படம். அதை இயக்கியவர் பிலிப்வில்சன்.இதுபற்றிப் பிரஷ் பேசும் போது,

” எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பில் மீது ஆர்வம். சென்னையின் ‘ஐஐடி கேந்திரீய வித்யாலயா ‘பள்ளி,செயின்ட் ஜோசப் பொறியியல்  கல்லூரி,மான்செஸ்டர் பல்கலைக் கழகம் வரை மேடையேறி நடித்தவன் நான்.

ஹாலிவுட்டில் நடிப்பு பயிற்சி பெற்று விட்டுத்தான் நடிக்க வருகிறார்கள்.எனவே கனடாவில் நான் நடிப்பு பயிற்சி பெற விரும்பினேன்.  நான் அங்கு  நடிப்புக்கானபயிற்சிபெற்றபோது முதலில் கற்றது நடிக்கும்  போது நடிப்பது என்பதே இருக்கக் கூடாது என்பதுதான்.

அதாவது நடிப்பதே தெரியாமல் யாதார்த்தமாக இயல்பாக இருப்பதே நல்லநடிப்பு என்பதையே அங்கு கற்றேன். புதிய திசை தெரிந்ததுபோல் இருந்தது. புதிதாக எனக்குள்ஒரு ஜன்னல் திறந்தது போல ஒரு தெளிவு கிடைத்தது. எனக்கு பயிற்சி அளித்தவர் கனடிய நடிகை லியானா ஷெனன். சினிமா நுணுக்கங்களை இயக்குநர் பேரிஜே.கில்லிஸ் கற்றுக் கொடுத்தார்.

இப்படி அவர்களிடம் பெற்ற பயிற்சி ,சினிமாவில் நடிக்க பெரிதும் நம்பிக்கை தந்தது. அதனால் முதல் படத்திலேயே பதற்றமில்லாமல் 200 சதவிகித நம்பிக்கையுடன்நடித்தேன்.

இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். நான் கனடாவில் ‘நிரந்தரமாக தங்கியிருப்பவர் ‘என்கிற  வசிக்கும் உரிமையைப் பெற்று இருக்கிறேன். எப்போதும் இங்குவந்து போகத்தடையில்லை.

எனக்கு தமிழில் நடிக்க மிகவும் விருப்பம். நான் ஒரு திரைக்கதை கூட எழுதிவைத்திருக்கிறேன்’ என்கிறார்.

நம்நாட்டில் நிலவும்  வன்கொடுமைகள், பெண்கொடுமைகள், கொலை, கொள்ளை .ஊழல், பாலியல்கொடுமை எல்லாம் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.புராணத்தில் கல்கி அவதாரம் எடுப்பது போல் நாயகன் இவற்றைக்களைய எடுக்கும் அவதாரம்தான் கதை. கை கோர்க்க தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்கவும் தயாராகஇருக்கிறார். இது மெகா பட்ஜெட் படம். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழியில் உருவாக்கும் திட்டமுள்ளதாம். தமிழில் ‘புத்தம்புது பூமி’ என்கிறபெயரிட்டுள்ளார்.இந்தியில் , ‘ புனர் நிர்மான் ஜமீன்’ ,ஆங்கிலத்தில் ‘ ஸ்டார்ஸ் ஆன் ரீபில்ட் எர்த்’ என்பது பெயர்கள்.
” என்னிடம் கதையையோ , நடிப்பையோ ‘கேளுங்கள் தரப்படும் தோண்டுங்கள் கிடைக்கும். ” என்று கூறுகிறார் பிரஷ் நம்பிக்கையுடன்.
கனவு கண்களில் மின்னுகிறது. ‘கடைவிரித்தேன் கொள்வார் யார் ? ‘என்று கேட்கிறார்.
பிரஷ்ஷுக்கு பிரெஷ்ஷாக ஒரு பிரகாச வாய்ப்பு வருமா? வந்துவிட்டால் வென்று விடுவார்.ஏனென்றால் காதலியை மட்டுமல்ல சினிமாவையும் தேடிப்பிடித்தால்ஜெயித்து விடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories