7 நாள் அரசு முறை துக்கம்: மாநில அரசு அறிவுப்பு

Published:

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம் தேதி) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்பதை தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒரு நாள் துக்கம்:
முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பீஹார், கேரளா, புதுச்சேரியில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img