February 21, 2026, 4:25 PM
30.4 C
Chennai

அண்ணனை இழந்த அண்ணிக்கு.. கொழுந்தன் செய்த கொடூரம்!

anni - 2026

மதுரையில் மறுமணம் செய்து கொண்ட பெண்ணை முதல் கணவரின் உறவினர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அனுமன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் முத்துக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தனிமையில் இருந்த வந்த மகேஸ்வரி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது இரண்டாவது கணவருடன் மகேஸ்வரி வசித்து வந்துதைக் கண்ட முத்துக்குமாரின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மகேஸ்வரியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் மகேஸ்வரி வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது முத்துக்குமாரின் சகோதரர் குமார் உட்பட 4 பேர் அங்கு வந்து மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துக்குமார் இறந்து சில மாதங்களே ஆன நிலையில் உனக்கு இரண்டாவது திருமணம் தேவையா? எனக் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்காத மகேஸ்வரியை நான்குபேரும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அச்சமடைந்த மகேஸ்வரி அந்த பகுதியிலிருந்து ஓட முயற்சித்துள்ளார் விடாமல் அவரை துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அங்கு கூட்டம் கூடவே அவர்கள் தப்பியோடிவிட்டனர். பலத்த காயங்களுடன் ரோட்டில் சரிந்து விழுந்த மகேஸ்வரியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரின் சகோதரர் உட்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories