திருவாரூர்: திரூவாரூரில், 100 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், மத்திய பல்கலைக் கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு, கான்கிரீட் மேற்கூரை அமைத்தபோது, மேற்கூரையும், அருகில் உள்ள சுவரும் திடீரென சரிந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். தொழிலாளர்கள் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர்: மத்திய பல்கலை கட்டட மேற்கூரை சரிந்து 3 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari